412 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
மாற்றலர்தம் வீரன்போல் உடைய ணிந்து மாற்றுருவில் பகைப்புலத்துப் படைவெள் ளத்தில் ஏற்றுடலன் பிறரறியா தொளிந்து சென்றான்; ஏந்தலுறை பாசறையை அறிந்து கொள்ள ஆற்றகிலான் ஒவ்வொன்றும் உற்று நோக்கி அரியேற்றின் உறைவிடத்தைக் கண்டு கொண்டான்; காற்றிலசை பாசறையின் திரையை நீக்கிக் கண்செலுத்திக் கூர்ந்ததனுள் நோக்கி நின்றான்.368
ஏற்றுடலன் - ஏறுபோன்ற உடலுடையவேழன். ஏந்தல் - கோளரி. ஆற்றகிலான் - முடியாமல். |