பக்கம் எண் :

418கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

‘பசுமையுடன் பளபளக்கும் பாடி வீடு
      பணிவரிய மாவேழற் குரிய தன்றோ?
அசதியுனக் கழகாமோ? மொழிக’என்ன,
      ‘ஆமாம்அப் பாசறையும் இதுவே போலப்
பசியதுதான்’ எனமழுப்பி நின்றா னங்கே;
      பதுங்குகின்றான் உண்மைசொல எனவு ணர்ந்தோன்,
‘உசவுமெனக் குண்மைநிலை யுரைத்து, வீரன்
      உறைவிடமுங் காட்டுதியேல் நன்றாம்’ என்றான்.381

‘யானுமவன் பாடியைத்தான் தேடு கின்றேன்
      யாண்டுமது தோன்றவிலை; தன்ன கர்க்குப்
போனஅவன் இன்னுமிவண் வந்தா னல்லன்
      போலுமெனக் கருதுகின்றேன்; வேழன் நெஞ்சில்
ஆனதுனி தணவாத கார ணத்தால்
      அவ்வுழைநின் றகலாமல் இருத்தல் கூடும்;
கோனவனோ டடுத்தடுத்துப் பிணங்கி நின்று
      குழப்புவது வழக்கம்’எனக் கூறி நின்றான்.382


அசதி - மறதி, உசவும் - வினவும், துனி - பகை, தணவாத - நீங்காத, உழை - இடம், கோன் - அரசன்.