| 420 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 88 கோளரி மதலைக் கோவின் பாசறை பாழுறச் செய்தனன்; பதறினன் மன்னன். செலும்வழியில் மதலையுறை கூடங் கண்டான்; சேர்துணையாம் இளவேலை மாய்த்த தெண்ணிக் கொலும்நினைவால் அதைநோக்கிப் பாய்ந்தான்; அந்தக் கோளரியின் கூக்குரலைக் கேட்ட வீரர் கலமிழந்து, வேங்கையினைக் கண்ட மான்கள் கலைந்தோடும் நிலைபோலச் சிதறிச் சென்றார்; எலும்பதிர நகைத்தவனாய் வேந்த னைக்கண் டெதிர்பொருதத் திறமிருப்பின் வருக’ என்றான்.385 மன்னவனோ மறுமொழியோ புறத்து வாயில் வாராத காரணத்தால் சினந்து செம்மல், ‘மன்னவனோ நீயுமொரு கோழை’ என்று வலிகொண்டு வல்லீட்டி வீசி விட்டான்; சின்னபின்ன மாகியது கூடம்; மன்னன் செயலொன்றும் அறியானாய் அஞ்சி யோடி ஒன்னலனை ஓட்டுதற்கு வேழன் தன்னை ஓடோடி அழைத்துவரப் பணித்து நின்றான்.386
மதலை - மதலைக்கோ, இளவேல் - இளவேலன், கலம் - படைக்கலம், ஒன்னலன் - பகைவன், |