பக்கம் எண் :

424கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இளவலுக்கு வாய்த்தஒரு வீரப் பாங்கும்,
      எதிர்பொருவார் மனங்கவரும் எழில்வ னப்பும்,
பளபளக்கும் அவன்முகத்தில் தவழ்ந கைப்பும்,
      பாய்ந்துவரும் அரிபோலும் அஞ்சா நோக்கும்,
களமுனைக்கு மதர்த்துவரும் பெருமி டுக்கும்,
      கண்குளிரக் கண்டுளத்தில் மகிழ்ச்சி பொங்கும்
அளவினுக்கோர் எல்லையில்லை; வலிய வேழன்
      அகமுருகி அவன்வயமாய் மொழிய லுற்றான்.394


மதர்த்து - செருக்கி