134 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
14 மணிவிழாக் காதை தெருவிடை மணல்ப ரப்பித் தெள்ளிய நீர்தெ ளித்தும் அரிசியிற் றிரித்த மாவால் அணிபெறக் கோல மிட்டும் வருபவர் உள்ள மெல்லாம் மகிழ்வினிற் குளிரும் வண்ணம் அரிவையர் கோலஞ் செய்ய அழகினாற் பொலிந்த தவ்வூர்.1 1 புதுக்கிய மனையின் வாயிற் பூம்பொழிற் பந்த ரிட்டார்; மதிற்புறங் கமுகு வாழை மரங்களும் குலைகள் தொங்க எதிர்ப்புறங் கட்டு வித்தார்; இளந்தளிர்க் குருத்தெ டுத்துப் புதுப்புது முறையாற் பின்னிப் பொலிவுற நால2 விட்டார். 2 மாவிலைத் தோர ணங்கள் வயங்குறக் கட்டு வித்தார்; பூவினிற் சரங்கள் கட்டிப் புதுமணம் பரவ விட்டார், வாவியிற் பூத்து நிற்கும் மலர்களும் கொணர்ந்து வைத்தார்; காவெனக் குளிர்ந்து தோன்றக் கடிநகர் கோலஞ் செய்தார். 3
1 மகிபாலன்பட்டி, 2 தொங்க |