பக்கம் எண் :

134கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

14
மணிவிழாக் காதை

தெருவிடை மணல்ப ரப்பித்
       தெள்ளிய நீர்தெ ளித்தும்
அரிசியிற் றிரித்த மாவால்
       அணிபெறக் கோல மிட்டும்
வருபவர் உள்ள மெல்லாம்
       மகிழ்வினிற் குளிரும் வண்ணம்
அரிவையர் கோலஞ் செய்ய
       அழகினாற் பொலிந்த தவ்வூர்.1 1

புதுக்கிய மனையின் வாயிற்
       பூம்பொழிற் பந்த ரிட்டார்;
மதிற்புறங் கமுகு வாழை
       மரங்களும் குலைகள் தொங்க
எதிர்ப்புறங் கட்டு வித்தார்;
       இளந்தளிர்க் குருத்தெ டுத்துப்
புதுப்புது முறையாற் பின்னிப்
       பொலிவுற நால2 விட்டார். 2

மாவிலைத் தோர ணங்கள்
       வயங்குறக் கட்டு வித்தார்;
பூவினிற் சரங்கள் கட்டிப்
       புதுமணம் பரவ விட்டார்,
வாவியிற் பூத்து நிற்கும்
       மலர்களும் கொணர்ந்து வைத்தார்;
காவெனக் குளிர்ந்து தோன்றக்
       கடிநகர் கோலஞ் செய்தார். 3


1 மகிபாலன்பட்டி, 2 தொங்க