கரந்தையிற் சங்கங் கண்டோர் கனிந்தநல் லன்பின் ஊறிச் சுரந்ததோர் மலரைச் சூட்டிச் சொல்லரும் மகிழ்வு பெற்றார்; பரந்தநம் நாட்டில் தோன்றும் பற்பல கழகச் சார்பில் நிரந்துபா மலர்சொ ரிந்து நெஞ்சினைத் திறந்து வைத்தார். 12 இறுதியில் மணியார் இயம்பினர் நன்றி; ‘பாட்டினும் உரையினும் பகர்ந்தன யாவும் கூட்டு மன்பைக் குறித்தன வேயாம் பன்மொழிப் புலவர்1 பாரதிச் செம்மல்2 என்னுயிர்த் தோழர்3 இவர்முத லாகச் 5 சொற்றநற் பெரியோர், உற்றுழி யுதவும் பற்றுள சபையார்4 மற்றும் இவ்வுழை இவ்விழா நிகழ்ச்சிகள் செவ்விதின் இயக்கிக் கவ்விய அன்புடன் கடமை யாற்றியோர் மலரும் அன்பின் விளைதரும் விலையிலா 10 மலரினை ஈந்து மனமகிழ் வூட்டியோர் அனைவரும் என்றும் நினைதற் குரியார்; அணிமையில் நிகழ்ந்த அண்ணா மலைமன் மணிவிழா நாளில் மன்னர் மனையுள் அளவிலாச் செவ்வியர் அடங்கி யிருந்தனர்; 15 அத்தகு மன்னர் அடியேன் சிற்றிலில் அடங்கி யிருந்து தொடங்கின ராயின் என்தவப் பேற்றை யாதென மொழிவேன்’ என்றுதம் நன்றியை எடுத்துரைத் தனரே.
1.தெ.பொ.மீ 2.நாவலர் ச.சோ.பாரதியார் 3.கரந்தை நீ கந்தசாமிப் பிள்ளை. 4.சன்மார்க்கசபையார். |