பக்கம் எண் :

ஊன்றுகோல்151

பறம்புமலை கொல்லிமலை ஒக்கூர் என்னும்
       பழம்பெருமை கொண்டிலங்கும் ஊரில் எல்லாம்
கரும்புநிகர் தமிழ்மொழிக்குச் 1சாறெ டுத்துக்
       களிகொண்ட தமிழரசு பூங்குன் றத்து
வரும்புலவர் மாமணியைச் சிலையிற் கண்டு
       வணங்கியது வாழ்த்தியது, மேலும் பண்டைப்
பெரும்புகழான் மேம்படுநல் லூர்கள் தேடிப்
       பெருமைசெயும் ஆர்வத்தால் விளங்கிற் றிங்கே. 4

எத்துயரம் ஏற்றாலும் தமிழ்மொ ழிக்கே
       என்வாழ்வு தாய்மொழியைக் காக்கும் போரில்
செத்தொழிய நேர்ந்தாலும் அந்த நாளே
       திருநாளாம் எனமுழங்கும் அரிமா ஏறு;
பத்தியுடன் தமிழ்ச்சான்றோர் தாள்வ ணங்கும்
       பண்புடையார்; 2உயர்கலைஞர்; அவர்தாம் எங்கள்
முத்தமிழ்தேர் மு. க. வின்3 சிலையை நாட்டின்
       முதலமைச்ச ராயிருந்து திறந்து வைத்தார். 5

உலையாத உள்ளத்தால் முயன்று தாமே
       உயர்நிலையில் முன்னேறி ஏறுங் காலை
அலையாக வருமிடர்கள் அனைத்துந் தாண்டி
       அமுதமென இனிதாகப் பேசும் பேச்சுக்
கலையாலே மக்களுளங் கவர்ந்து நின்ற
       கதிரிரண்டாம்; இலக்கியவான் நெறியில் 4ஒன்று
தலையான அரசியல்வான் வழியில் 5ஒன்று
       தமிழ்க்கதிரை அக்கதிர்தான் வாழ்த்திற் றம்மா! 6

ஊன்றுகோல் கோண்டே யாண்டும்
       உலவிநற் றமிழ்வ ளர்த்தார்
ஊன்றுகற் சிலையாய் நின்றார்;
       ஆயினும் உய்வு காண


1.விழா.2.முதல்வர்.மு.கருணாநிதி. 3.மு.கதிரேசனார்.
4.பண்டிதமணி, 5.கலைஞர்.மு.கருணாநிதி