152 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
1ஊன்றுகோள் நமது ளத்தில் ஒவ்வொன்றும் மணிகளாகும்; ஊன்றிநாம் எண்ணி யெண்ணி உருப்பெற உழைத்தல் வேண்டும். 7 ‘அயன்மொழிப் பயிற்சி அன்னை மொழியிடம் அன்பைக் கூட்டப் பயன்படும் எனினும் இந்தி பயின்றிட வற்பு றுத்தின் இயல்பினிற் றமிழ்வ ளர்ச்சி தடைப்படும் ஏற்றங் குன்றும் மயலுளார் திணிப்ப ராயின் வருபயன் இல்லை’ என்றார். 8 ‘உரியதன் மொழியில் ஆக்கம் உயர்ந்திட ஓம்பிக் காத்துத் தெரிதருஞ் சுவையை மாந்தத் தெரிகிலா நாடு தானும் பெரியதே எனினும் யாவும் பின்னடைந் தழியும்; உள்ள பெருமையுந் தேயும்’ என்றே பேசினர் மதியா லாய்ந்து. 9 ‘தாய்மொழி என்று சொல்லும் தனிமொழி எதுவோ அந்தத் தூய்மொழி வாயி லாகத் தொடங்கிடும் கல்வி தன்னைச் சேய்களும் முதற்கண் கற்றுத் தெளிந்திடல் வேண்டும் இன்றேல் தேய்வுறும் அறி’வென் றெண்ணித் தேர்ந்தவர் தெளிந்து சொன்னார். 10
1.ஊண்றிய கொள்கை |