42 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
2 கலைபயில் காதை திண்ணையிற் பள்ளி வைத்தே தெளிவுறக் கற்கக் கல்விப் பண்ணையென் றதனைக் கொண்டே பயின்றனர் அற்றை நாளில்; எண்ணுடன் எழுத்தும் மண்ணில் ஏட்டினில் எழுதி ஓதிக் கண்ணென மதித்துப் போற்றிக் கல்வியை ஓம்பிக் காத்தார் 1 பலர்புகழ் கல்வி கற்கப் பச்சிளஞ் சிறுவர் எல்லாம் புலருமுன் விழித்துக் கொள்வார் புள்ளெனப் பறந்து செல்வார்; மலர்விரல் கொண்டு மண்ணில் வடிவுற எழுதிக் காட்டி அலர்சிறு வாயால் ஓதி அவரவர் முறைவைப் பாரே 2 எழுத்தறி வித்த ஆசான் இறைவனென் றெண்ணி வந்தார் பழுத்தநல் லறிவும் அன்பும் பண்புடன் கருணை நெஞ்சும் வழுத்திடுந் தோற்ற முங்கொள் வானவன்1, பயில வந்தோர் தழைத்திடல் ஒன்றே கொண்டு தண்ணளி சுரப்பன் நன்றே 3
1கொள்வான் அவன்., |