பக்கம் எண் :

ஊன்றுகோல்45

முத்தமிழ் அளக்க வல்ல
       முழுமதி பெறுவான் அங்கே
அத்துணி அளந்து விற்றான்
       அவன்நிலை யாரே கண்டார்
புத்தகம் எழுதுங் கையால்
       புதுத்துணி மடித்துத் தந்தான்
1பத்துடன் தொகையைச் சொல்வான்
       பணத்தொகை விலையைச் சொன்னான் 12

தொகைஎனும் நூல்சொல் வாயால்
       துணித்தொகை பகர்ந்த போதும்
தகுதியின் மிக்க சான்றோர்
       தம்முடன் பழகி வந்தான்
வகைபடு துணிக ளெல்லாம்
       வாணிகம் செய்யும் போதும்
அகமொரு தனித்த போக்கை
       அவாவியே சென்ற தங்கே 13

துணிகளைக் கைகள் பற்றும்
       தூய்மையை நெஞ்சம் பற்றும்
1அணிகலை விழிகள் நோக்கும்
       2அணிகளை உள்ளம் நோக்கும்
துணிநயம் விரல்கள் பார்க்கும்
       சொல்நயம் சிந்தை பார்க்கும்
மணியவன் நினைவு முற்றும்
       மற்றுமோர் உலகிற் செல்லும் 14

நடந்தன ஆண்டு மூன்று
       நயந்துணி விலைகள் பேசித்
தொடர்ந்தது விற்கும் செய்கை
       துணிபடு மாறு, தந்தை


2.பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்.
1.அணியும் ஆடை (யை), 2.உவமை முதலான அணிகளை