பக்கம் எண் :

68கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

உலகியல் நன்கு தேர்ந்தார்
       இவரைப்போல ஒருவ ரில்லை;
கலைபயில் அறிவும் அந்த
       உலகிய லறிவுங் கண்டோர்
துலையினில் தூக்கிப் பார்ப்பின்
       மிக்கது தோன்றா ராக
அலைபடும் மனத்த ராவார்;
       அவ்வணம் தெளிந்து நின்றார் 24

மேற்கணக்காய்க் கீழ்க்கணக்காய் மேவுபதி
       னெண்கணக்குங் கற்றுத் தேர்ந்தார்;
பார்த்தலத்தில் வரவுபற்றுப் பார்க்கின்ற
       பணக்கணக்குங் கற்றுத் தேர்ந்தார்;
மேற்புலத்தாற் றெளிவுபெறல், மிகுதிருவால்
       மேம்படுதல் வெவ்வே றென்ற
1நூற்கணக்கை மாற்றிவைத்த இவர்திறத்தை
       நுண்ணறிவை வியவார் யாரோ? 25


1.இருவேறுலகத்தியற்கை என்ற குறளின் கருத்தை.