82 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
7 வழக்காடு காதை ‘கலையறி வார்ந்த நெஞ்சிற் கருவுறும் கவிதை எண்ணம், புலமையிற் செறிந்த பாடல் புதல்வனாய் வந்து தோன்றும், கலையது கருக்கொள் ளாராய்க் கருவினை உயிர்க்க எண்ணின் நலமுறும் மகவா தோன்றும்? நகைப்பன்றோ வந்து தோன்றும்!’ 1 ‘நிறைபுலம் செழிக்கப் பெற்றோர் நிலையுறும் பாடல் யாக்கும் முறைகளும் தெரிதல் வேண்டும் முற்றிய புலமை என்றால் நெறிபிற ழாத பாடல் நெய்திடுந் திறமை வேண்டும், நெறிபெறுந் தமிழ்த் தொண் டாக நினைத்திதைச் செய்க’ என்பார், 2 பிழைபடப் பாடல் யாத்தல் பீடுயர் தமிழ்மொ ழிக்கே அழிவிலாப் பழியை ஆக்கும் ஆதலின் நண்ப ரேனும் வழுவுறும் பாடலொ ன்றை வடிப்பினும் வெகுண்டு ரைப்பார் ‘இழிவுறும் செயலைச் செய்ய 3 இனியும்நீர் முயலேல்’ என்பார். |