கருத்து வேற்றுமை பெருத்துள நாளில் கறுத்தெழுந் தார்சிலர் கம்பன் யாரெனக் கிளர்ச்சிகள் நடத்தினர்; கிழவர் இவர்தாம் நகைச்சுவை மொழியால் நவின்றனர் சிலசொல் ‘கம்பை யுடையவன் கம்பன் அதனால் 5 கம்பன் யானே’ கழறினர் இவ்வணம்; அவையில் இருந்தோர் அனைவரும் அந்நகைச் சுவையால் மகிழ்ந்தனர்; சோர்ந்தன கையே. தமிழ்மணிப் புலவர் தலைமை தாங்க வழக்கில் வல்லவர் முழக்கினர் ஒருநாள் 10 நற்றமிழ்ப் புலவர் பற்பல குற்றம் உற்றவர் என்று குற்றஞ் சாற்றிக் ‘காலம் பொன்னெனக் கருதார் அவர்தாம் காலங் கடந்தே வருதல் கண்டுளேம்’ என்று பற்பல எடுத்து மொழிந்தவர் 15 நேரங் கடந்து நிறுத்தினர் பேச்சை; கூறும் குற்றச் சாற்றினைக் கேட்டு முடிவுரை ஒன்று மொழிந்தனர் தலைவர் ‘ஏதிலார் குற்றம் எடுத்துரைப் பதுபோல் ஓதுவோர் தம்பாற் குற்றம் உறுவதை 20 ஓர்ந்து காண்பரேல் ஒருதுய ரிலையே’ என்றதும் அவையில் எழுந்தது நகைப்பே, சுவைமணி சிதம்பர நாதர்1 ஒருநாள் அவையிற் பேச எழுமுன் அறிமுகம் செய்ய எழுந்த துய்ய மணியார், 25 ‘பாட்டின் சுவையிற் பழகிய மணியிவர் கம்பன் பாடற் காசுகள் எடுத்துக் கொட்டுவார் தட்டுவார் கூடிய பாடலில் கம்பன் முத்திரை காணாக் காசிவை 30 செல்லாக் காசெனச் செப்பி எறிவார்; படலம் பலவும் திடமுடன் எறிவார் இடைஇடைச் செருகல் என்றெடுத் தெறிந்திட ஒருவர் போதும்; பலரிவண் தோன்றின் கம்பனைத் தேடிக் கற்றுத் தொலைக்கும் 35
1டி.கே.சிதம்பரநாத முதலியார் |