இலக்கண விதி: மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி சென்று பொருந்தும் முயற்சியால், த், ந் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் பிறக்கும். அண்பல் அடிநா முடியுறத் தநவரும். (ந-நூற்பா 80.) (ப,ம இவற்றின் முயற்சிப் பிறப்பு) அப்பா அம்மா இச் சொற்களில் உள்ள ப், ம் என்ற இரண்டு மெய்யெழுத் துக்களையும் ஒலித்துப் பாருங்கள். அவை, மேலுதடும் கீழு தடும் பொருந்தும் முயற்சியால் பிறத்தல் தெரியவரும். இலக்கண விதி: மேலுதடும் கீழுதடும் பொருந்தும் முயற்சி யால் ப், ம் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் பிறக் கும். மீகீ ழிதழுறப் பம்மப் பிறக்கும் (ந-நூற்பா 81.) (ய, என்ற எழுத்தின் முயற்சிப் பிறப்பு) தாய்சேய் இச் சொற்களில் உள்ள ய் என்ற மெய்யெழுத்தை ஒலித்துப் பாருங்கள். அஃது, அடி நாக்கு மேல்வாய் அடியைப் பொருந்தும் முயற்சியால் பிறப்பது தெரியவரும். இலக்கண விதி: அடி நாக்கு மேல்வாய் அடியைப் பொருந்தும் முயற்சியால், ய் என்ற மெய்யெழுத்துப் பிறக்கும். அடிநா வடியண முறயத் தோன்றும். (ந-நூற்பா 82.) (ர, ழ இவற்றின் முயற்சிப் பிறப்பு) நீர் அமிழ்து இச்சொற்களில் உள்ள ர், ழ் என்ற இரண்டு மெய்யெழுத்துக் களையும் ஒலித்துப் பாருங்கள். அவை, மேல்வாயை நுனி நாக்குத் தடவும் முயற்சியால் பிறத்தல் வெளிவரும். |