7.விண்வெளி வீரர்கள். 8.பெண்மை வாழ்க! 9.உடல் மண்ணுக்க, உயிர் தமிழுக்கு. 10.தாய்நாட்டுப் பற்று. 12. கொடுக்கப்பட்ட மேற்கோள் நூல்களிலிருந்து கட்டுரைப் பொருள் திரட்டல். ஒதுதல் ஒழியாது நடைபெறல் வேண்டும். ஆதலின் மாணவர்கள் பல நூல்களை வாங்கிப் படித்தல் வேண்டும். மாணவர்கள், தாம் படிக்கின்ற மேற்கோள் நூல்களிலிருந்து கட்டுரைக்கு வேண்டிய பொருள் திரட்டல் வேண்டும். காட்டாக: சிலப்பதிகாரக் கதையைக் கூறக் கூடிய உரை நடைப்பனுவல் கொடுக்கப்படுமானால், அதனைக் கொண்டு கீழ்க்கண்டவாறு கட்டுரைப் பொருள் திரட்டல் வேண்டும். முன்னுரை: தமிழ்க் காப்பியங்கள் - நெஞ்சை அள்ளும் காவியம். பொருள் : சிலப்பதிகாரம், மூன்று பேருண்மைகளைக் காப்பியத்தின் மையமாகக் கொண்டது. தமிழர்யாவர்க்கும் அது மேற்கோள் நூலாகும். (அந்நூலிருந்து கட்டுரைக்கக் கீழ்க்கண்ட வாறு குறிப்புக்கள் எடுத்துக் கொளல் வேண்டும். வாழ்த்துப் பகுதி - திருமணம் - ஆடல் மகளுடன் வாழ்ந்த வாழ்வு - கோவலன் வீடு திரும்பல் - தன் மனைவியை மதுரைக் கழைத்தல் - கவுந்தியடிகளின் துணை - ஆயர்குடியில் வரவேற்கப் படல் - கோவலன் சிலம்பு விற்கச் செல்லல் - கொலைக்களக் காட்சி - கண்ணகி உண்மையை உணர்தல் - தன் கணவன் கள்வனல்லன் என விளக்கிக் காட்டல் - அரசன் உயிர் விடுதல் - கண்ணகி சேரநாடு அடைதல் - செங்கட்டுவன் கல்லெடுத்துக் கோயில் அமைத்தல் - யாவராலும் கண்ணகி தொழப்படுதல் - முடிவுரை. இவ்வாறு, மேற்கோள் நூல்களைக் கொண்டு கட்டுரைகள் எழுதிப் பயிற்சி பெறவேண்டும. திருக்குறள், புறநானூறு, கம்பரா மாயணம் போன்ற மேற்கோள் நூல்கள் கொடுக்கப்பட்டால் |