150 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
கிறார் என்பதற்காகக் கூறவில்லை. (கைதட்டல்). உண்மைநிலையை விளக்கினேன். காலம் பொன்போனற்து என்பர். அப்பொன்னான காலத்தை, ஆயிரக்கணக்கான மக்கள், நாடோறும் பாழ்படுத்தி வருகின்றனர். மேலும், காசுங் கரியாகிறது. ஒருவரையொருவர் அடித்துக் கொண்டும், இடித்துக்கொண்டும், முட்டிக் கொண்டும், தள்ளிக்கொண்டும் சீட்டு வாங்க முனைகின்றபொழுது, எத்துணை இழப்புக்கள் நேரிடக்காண்கின்றோம். வரிசையில் நின்று ஒழுங் குறச் செல்லும் புத்தகம்’ என்று அவர் குறிப்பிட்டார். அது பொது மக்கள் பண்பாட்டைக் குலைக்கும் புதுக் கருவி என்றே நான் கூறுவேன். புத்தகத்தைக் கற்பதால், சொற்பொழிவைச் சுவைப்பதால், இசையைக் கேட்பதால் கெட்டார்கள் என இதுவரை கேள்விப் பட்டதேயில்லை. ஆனால், திரைப்படத்தால் தீமை பெருகிப் பரந்து விரிந்து வருவதை நம் மாணவர்களுடைய தோற்றமும் ஒப்பனை யுமே தெள்ளத் தெளிய விளக்கி நிற்கின்றன. தலையலங்கோலம், ஆடைக் குறைப்பு இவற்றில் நம் மாணவர்தம் மாண்பு எங்கே? (கைதட்டல்). நகைச் சுவைக்காக நான் இதைக் கூறவில்லை; நாட்டின் போக்கைக் கண்டு, மனம் நைந்து கூறுகிறேன். எனவே, திரைப்படத்தால் சமுதாயமே சீரிழந்து வருகிறது. என்பதைத் தாழ்மையுடன் வற்புறுத்திக் கூறி முடிக்கின்றேன்; வணக்கம். இங்ஙனம், எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றி ஒட்டியும் வெட்டியும், உரையாடல்களைப் பேசியோ எழுதியோ பழகிக் கொள்வது நன்று. 18. நூல் மதிப்புரை எழுதுதல் மாணவர்கள் ஒரு நூலைப் பயின்ற பிறகுதான். அதற்கு மதிப்புரை எழுதத் தொடங்கவேண்டும். மதிப்புரை என்பது அந்நூலின் சிறப்பை விளக்குவதாகவும், குறைகளைத் தெரிவிப்ப தாகவும் அமைதல் வேண்டும். பனுவல் மட்டுமல்லாது பார்த்த திரைக்காட்சி, நாடகக் காட்சி, பொருட்காட்சி, கண்காட்சி முதலியன குறித்தும் மதிப்புரை எழுதலாம். பொன்னை உறைத்து அறிவாகிய கல்லில் உறைத்துப் பார்த்து உண்மை யுரைப்பதுதான் மதிப்புரையாகும். இச்செயலை மாணவர்கள் நன்கு வளர்த்துக் கொளல் வேண்டும். |