பக்கம் எண் :

158கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

பொய்கையார்: அன்புடை மன்ன! நின்மொழி கேட்டு என் அகம் குளிர்கிறது. மகிழ்ச்சி! நினது அடக்கத்தை யாவரும் போற்றுவர் என்பதில் தடையில்லை.

அமைச்சர்: சிலர் அழுக்காறும் கொள்ளுகின்றனர்.

சேரமான்: என்ன?

அமைச்சர்: தங்கம் புகழ் பெருகி வருவதைக் கண்டு சோழ மன்னர் அழுக்காறு கொள்வதாக ஒற்றர் வாயிலாக அறிகிறேன்.

பொய்கையார்: உலகம் பலவிதம் மன்ன! இதைப் பொருட் படுத்த வேண்டாம். நாம் கலை மன்றம் செல்வோம்.

(அவை கலைகிறது.)

காட்சி-2

இடம்: உறையூர்; சோழன் அரண்மனையில் கொலு மன்றம்.

காலம்: மாலை.

நடர்: சோழன் கோச்செங்கணான், அமைச்சர்கள், மதிவலன், கயமன், படைத் தலைவன் படிறன், ஏவலர் முதலியோர்.

சோழன்: அமைச்சரே! நாட்டியம் நடைபெறலாமே!

கயமன்: கட்டளை

(கயமன் ஏவலால் ஒருத்தி நாட்டிய மாடி வணக்கம் செலுத்திச்செல்கிறாள்.)

சோழன்: நன்று! நன்று! நாட்டியக் கலையின் மேன்மையே மேன்மை!

கயமன் : மிகவும் உயர்வான கலை!

மதிவலன் : சமண முனிவர்கள் இதை வெறுத்துக் கூறியிருக் கிறார்கள், வேந்தே!

படிறன் : கலையின் பெருமையை உணராதவர்கள்!

கயமன் : துறவிகளுக்குக் கலையின் உணர்வேது?

சோழன் : துறவிகள் ஐம்புலனை அடக்கியவர்கள். ஆகை யால், இன்பக் கலைகளில் நாட்டம் வைக்க விரும்பு வதில்லை!