பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்17

தத்தம் ஒரு பொருளைத் தருகின்றன. இங்ஙனம் பகாப்பதமும், பகுபதமும் தனித்து நின்று தத்தம் பொருளைத் தருமானால், அவை தனிமொழி (ஒரு மொழி) எனப்படும்.

2. தொடர்மொழி

(அல்வழி)

நிலம் வலிது

அது கொல்

சாலப் பகை

மேற்கண்ட எடுத்துக் காட்டுக்களில் நிலம் என்ற பகாப் பதமும், வலிது என்ற பகாப்பதமும் தம்முள் தொடர்ந்தும் அது என்ற பகாப்பதமும், கொல் என்ற பகாப்பதமும் தம்முள் தொடர்ந்தும், சால என்ற பகாப்பதமும், பகை என்ற பகாப்பத மும் தம்முள் தொடர்ந்தும், அல்வழியில் இரண்டு முதலிய பல பொருள்களைத் தருகின்றன.

இரண்டு முதலிய பல பொருளைத் தருதலாவது: ‘நிலம் வலிது’ என்ற தொடரில் உள்ள ‘நிலம்’ என்பது, ‘பூமி’ என்ற பொருளையும், ‘வலிது’ என்பது, ‘வலிமையுடையது’ என்ற பொரு ளையும், ‘நிலம் வலிது’ என்பது, ‘பூமி வலிமையுடையது’ என்ற பொருளையும் தருதலாகும்.

(வேற்றுமை)

நிலங் கடந்தான்

நிலத்தைக் கடந்தான்

நிலத்தைக் கடந்த நெடுமால்

மேற்கண்ட எடுத்துக் காட்டுக்களில், ‘நிலம்’ என்ற பகாப் பதமும், ‘கடந்தான்’ என்ற பகுபதமும் தம்முள் தொடர்ந் தும், ‘நிலத்தை’ என்ற பகுபதமும், ‘கடந்தான்’ என்ற பகுபதமும் தம்முள் தொடர்ந்தும், வேற்றுமையில் இரண்டு முதலிய பல பொருள்களைத் தருகின்றன.

‘நிலத்தைக் கடந்த நெடுமால்’ என்ற எடுத்துக்காட்டில் ‘நிலத்தை’ என்ற பகுபதமும், ‘கடந்தான்’ என்ற பகுபதமும், ‘நெடு’ என்ற பகாப்பதமும், ‘மால்’ என்ற பகாப்பதமும், தம்முள் இரண்டு