தென்பதும் அகப்பற்றாகிப் யானெப்பதும் விடும், ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே யுவர்த்துவிடுதலெனக் கொள்க.” -பரிமேலழகர். தருக்கநடை: வினாவிடை அமைப்பில் தொடரும் நடையைத் தருக்க நடை என்பர். கற்பார் மனத்தில் நன்கு பதிய இந்நடை சாலத் துணை புரியும். “ ‘உலகம் ஒருகுலமாதல் வேண்டும்’ என்று பேசுதல் எளிது; எழுதுதல் எளிது. பேச்சும் எழுத்தும் செயலாதல் வேண்டும். செயலை எழுப்பவல்ல கருவி உளதா? உளது. அஃது அன்பு. உலகை ஒருகுல மாக்குதற்கென்று அன்பு இயற்கையில் அமைந்துள்ளது. அன்பு யாண்டு இல்லை? அஃது யாண்டும் உளது. அவ்வன் புண்மைக்கு அறிகுறி என்னை? வளர்ச்சி. வளர்ச்சியற்ற உலகம் உண்டு கொல்? இல்லை. ” -திரு.வி.க. மேலும், ஒரு பொருள்பற்றி இருவர் உரையாடல் நிகழ்த்து வதாக எழுதுவதும் தருக்க நடையே யாகும். கலப்பு நடை: பல மொழிச் சொற்களையும் கலந்து எழுதுவது கலப்பு நடை எனப்படும். இதுவும் மாணாக்கரால் வெறுத்தொதுக்கப் பட வேண்டியதே. “அலமாரியில் இருந்த பணத்தைத் திருடியதற்காகக் கை தியாக்கப்பட்டுக் குற்றம் ருஜு வாக்கப்பட்டு அதனால் கோர்ட் டாராலே ஒறுக்கப்பட்டவன், சில நாளில் ஜெயில் சம்பியை வளைத்து வெளியேறித் தப்பி விட்டான். ஆனால், சிறிது காலத் திற்குப் பிறகு அவன் காயலாக் கிடந்து மரணமுற்றான்.” அலமாரி, ஜன்னல்போர்த்துக்கீசியச் சொற்கள் கைதிஉருதுச் சொல் ருஜு” கோர்ட்டார்ஆங்கிலம் மரணம்வடமொழி காயல் - (காய்ச்சல்)இழிவழக்கு |