174 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
கூறாது பிறவழியிற் கூறின் மரபு வழுவாம். கீழே சில மரபு வழுக்களும் அவற்றிற்கான திருத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மாணாக்கர் கற்று மரபு வழியிற் நிற்பாராக. மரபு வழுதிருத்தம் ஆட்டுச் சாணம்ஆட்டுப் பிழுக்கை யானைச் சாணம்யானை இலண்டம் கரும்புத் தோப்புகரும்புத் தோட்டம் கரும்பிலைகரும்புத் தோகை புலி கத்தும்புலி முழங்கும் யானை உறுமும்யானை பிளிறும் தேன் உண்தேன் நக்கு நீர் உண்நீர் பருகு மயில் கூவும்மயில் அகவும் நாய் சத்தமிடும்நாய் குரைக்கும் நரி குரைக்கும்நரி ஊளையிடும் காக்கா கத்தியதுகாக்கை கரைந்தது குயில் கரைந்ததுகுயில் கூவியது யானை ஓட்டி யானைப் பாகன் சந்தனம் அணிந்தான்சந்தனம் பூசினான் பால் சாப்பிடுபால் குடி மாடு புல்லுண்ணும்மாடு புல்மேயும் 10. உவமைகளும் பழமொழிகளும் வைத்தெழுதுதல். உவமைகள் : அறிந்ததைக் கொண்டு அறியாததை விளக்கு வதற்கும், அழகுபடச் சொல்வதற்கும் நம் முன்னோர் உவமை களைப் பயன்படுத்தி வந்தனர். கீழே சில உவமைத் தொடர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நும் சொந்த வாக்கியங்களில் அமைத்துப் பயில்க. அத்தி பூத்தாற் போல அன்றலர்ந்த மலர் போல அலை ஓய்ந்த கடல் போல அழலில் இட்ட மெழுகு போல |