182 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
இவை + தோடுகள்=இவை தோடுகள் எவை + சிறந்தன=எவை சிறந்தன யாவை + பாடின=யாவை பாடின அத்தனை + கூறினான்=அத்தனை கூறினான் இத்தனை + பெரிதோ= இத்தனை பெரிதோ எத்தனை + தந்தாய்=எத்தனை தந்தாய் அவ்வளவு + போதும்= அவ்வளவு போதும் இவ்வளவு + தேவை= இவ்வளவு தேவை எவ்வளவு + கொடுத்தான்= எவ்வளவு கொடுத்தான் 8. வினைச் சொற்கள் ‘படி’ என்னும் துணையுறுப்பைப் பெற்றுவரும் போதும் வல்லினம் மிகாது. சொன்னபடி + செய்தேன்=சொன்னபடி செய்தேன் இரும்கும் படி + சொன்னான்=இருக்கும்படி சொன்னான் வரும்படி + கூறினான்= வரும்படி கூறினான் 9. பல, சில என்னும் சொற்களின்முன் சில இடங்களில் வல்லினம் மிகாது. பல + பாடல்கள்=பல பாடல்கள் சில + செய்திகள்=சில செய்திகள் 10.ஆ, ஓ, ஏ என்னும் இடைச் சொற்களின் முன்னும் வல்லினம் மிகாது. முடிக்கவா + சென்றான்=முடிக்கவா சென்றான் தொடுக்காவோ + பூ=தொடுக்கவோ பூ அவனே + சிறந்தவன்= அவனே சிறந்தவன் 11. எண்ணுப் பெயர்களின் முன்னும் வல்லினம் மிகாது. இரண்டு + கொடு=இரண்டு கொடு ஐந்து + சொன்னான்=ஐந்து சொன்னான் 12. அன்று, இன்று, என்று என்னும் காலப்பெயர்களின் முன் வல்லினம் மிகாது. |