பக்கம் எண் :

182கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

இவை + தோடுகள்=இவை தோடுகள்

எவை + சிறந்தன=எவை சிறந்தன

யாவை + பாடின=யாவை பாடின

அத்தனை + கூறினான்=அத்தனை கூறினான்

இத்தனை + பெரிதோ= இத்தனை பெரிதோ

எத்தனை + தந்தாய்=எத்தனை தந்தாய்

அவ்வளவு + போதும்= அவ்வளவு போதும்

இவ்வளவு + தேவை= இவ்வளவு தேவை

எவ்வளவு + கொடுத்தான்= எவ்வளவு கொடுத்தான்

8. வினைச் சொற்கள் ‘படி’ என்னும் துணையுறுப்பைப் பெற்றுவரும் போதும் வல்லினம் மிகாது.

சொன்னபடி + செய்தேன்=சொன்னபடி செய்தேன்

இரும்கும் படி + சொன்னான்=இருக்கும்படி சொன்னான்

வரும்படி + கூறினான்= வரும்படி கூறினான்

9. பல, சில என்னும் சொற்களின்முன் சில இடங்களில் வல்லினம் மிகாது.

பல + பாடல்கள்=பல பாடல்கள்

சில + செய்திகள்=சில செய்திகள்

10.ஆ, ஓ, ஏ என்னும் இடைச் சொற்களின் முன்னும் வல்லினம் மிகாது.

முடிக்கவா + சென்றான்=முடிக்கவா சென்றான்

தொடுக்காவோ + பூ=தொடுக்கவோ பூ

அவனே + சிறந்தவன்= அவனே சிறந்தவன்

11. எண்ணுப் பெயர்களின் முன்னும் வல்லினம் மிகாது.

இரண்டு + கொடு=இரண்டு கொடு

ஐந்து + சொன்னான்=ஐந்து சொன்னான்

12. அன்று, இன்று, என்று என்னும் காலப்பெயர்களின் முன் வல்லினம் மிகாது.