இங்கு, ‘அம்-ஆம்’ என்ற விகுதிகளை இறுதியிலே உடைய தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், தனித்தும், முன்னிலையை உளப்படுத்தியும் மூன்று காலங்களிலும் இரு திணைப் பொதுவினைகளாக வந்துள்ளன. உண்டனெம்-உண்கின்றனெம்-உண்பெம் யாம் உண்டேம்-உண்கின்றோம்-உண்பேம் யானும் உண்டோம்-உண்கின்றோம்-உண்போம் அவனும் இங்கு, ‘எம்-ஏம்-ஓம்’ என்ற விகுதிகளை இறுதியிலே உடைய தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், தனித்தும், படர்க்கையை உளப்படுத்தியும் இரு திணைப் பொது வினைகளாக வந்துள்ளன. தாரினம் தாரினாம் யாம்-யானும் நீயும் இங்கு, ‘அம்-ஆம்’ என்னும் விகுதிகளை இறுதியிலே உடைய தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்றுச்சொற்கள், தனித்தும், முன்னிலையை உளப்படுத்தியும் இருதிணைப் பொதுவினைகளாக வந்துள்ளன. தாரினெம் தாரினேம் யாம்-யானும் அவனும் தாரினோம் இங்கு, ‘எம்-ஏம்-ஓம்’ என்னும் விகுதிகளை இறுதியாக உடைய தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், தனித்தும், படர்க்கையை உளப்படுத்தியும் இருதிணைப் பொது வினைகளாக வந்துள்ளன. உண்டும (உண்டோம்) வந்தும் (வந்தோம்)(இறந்த காலம்) யாம்- சென்றும் (சென்றோம்)யானும் நீயும் அவனும் உண்கும் (உண்போம்) வருதும் (வருவோம்)(எதிர்காலம்) சேறும் (செல்வோம்)யாம்-யானும் நீயும் அவனும் |