பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்31

‘வேறு - இல்லை-உண்டு’ என்ற மூன்று குறிப்பு வினை
முற்றுச் சொற்கள், ஐம்பால்களிலும், மூன்று இடங்க ளிலும் வரும் பொது வினைகளாகும்.

நீ போதல் வேண்டும்
சோறு உண்ணத்தகும்
வஞ்சரை அஞ்சப்படும்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உள்ள ‘வேண்டும்- தகும்-படும்’ என்ற சொற்கள் தேற்றப் பொருளில், ஐம்பால் மூவிடத்திற்கும் உரியனவாகிய பொதுவினைகளாக வரும்.

இலக்கண விதி: வேறு - இல்லை - உண்டு என்னும் மூன்று குறிப்பு வினைமுற்றுக்கள், ஐம்பாலுக்கும், மூவிடத்திற்கும் உரியன வாம்.

(பெயரெச்சவினை வினைக்குறிப்புக்கள்)
(இருதிணைப் பொதுவினை)

உண்ட-உண்கின்ற-உண்ணும்-சாத்தன் (வினைமுதல்)
உண்ட-உண்கின்ற-உண்ணும்-கலம் (கருவி)
உண்ட-உண்கின்ற-உண்ணும்-இடம் (நிலம்)
உண்ட-உண்கின்ற-உண்ணும்-ஊண் (தொழில்)
உண்ட-உண்கின்ற-உண்ணும்- நாள் (காலம்)
உண்ட-உண்கின்ற-உண்ணும்-சோறு (செயப்படுபொருள்)

மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் ‘செய்த செய்கின்ற-செய்யும்’ என்னும் வாய்ப்பாட்டில் அடங்கும், அறுவகைப் பொருட் பெயர்களும், எஞ்ச நின்ற, ‘உண்ட-உண்கின்ற-உண்ணும்’ என்ற முக்காலப் பெயரெச்சங்களும் இருதிணைப் பொதுவினை களாகும்.

கரியகுதிரை, மக்கள்
உண்ணாதமக்கள்,குதிரை
இல்லாதபொருள், மக்கள்

மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் உள்ள ‘கரிய’ என்ற குறிப்புவினைப் பெயரெச்சமும் ‘உண்ணாத’ என்ற எதிர்மறைத்