பக்கம் எண் :

64கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

(தெரிநிலைப் பெயரெச்சம்)

படித்த பெண்

இங்கே, ‘படித்த ’ என்ற வினைச்சொல், பகுதியால் தொழிலையும், இடைநிலையால் காலத்தையும், வெளிப்படை யாக உணர்த்து கிறது. திணைபால் உணர்த்தும் விகுதி இன்மையால் ‘படித்த’ என்ற சொல் முற்றுப் பெறவில்லை. எனவே, ‘படித்த’ என்பது எச்சவினை யாகும். அது, பெண் என்ற பெயர்ச் சொல்லைச் சார்ந்து முற்றுப் பெறுகிறது. எனவே, ‘படித்த’ என்பது தெரிநிலைப் பெயரெச்ச மாகும்.

(தெரிநிலை வினையெச்சம்)

படித்துத் தேறினாள்

இங்கே, ‘படித்து’ என்ற வினைச்சொல், பகுதியால் தொழிலையும், இடைநிலையால் காலத்தையும் வெளிப்படை யாக உணர்த்துகிறது. திணைபால் உணர்த்தும் விகுதி இன்மையால் ‘படித்து’ என்ற சொல் முற்றுப் பெறவில்லை. எனவே, ‘படித்து’ என்பது எச்சவினையாகம். அது, தேறினான் என்ற வினைச் சொல்லைச் சார்ந்து முற்றுப் பெறுகிறது. எனவே, ‘படித்து’ என்பது தெரிநிலை வினையெச்ச மாகும்.

இங்ஙனம், தெரிநிலை வினைமுற்று, தெரிநிலைப் பெய ரெச்சம், தெரிநிலை வினையெச்சம் எனத் தெரியநிலை வினை மூன்று வகைப்படும்.

(குறிப்பு வினைமுற்று)

அவன் நல்லவன்

இங்கு ‘நல்லவன்’ என்பது தொழிலையும் காலத்தையும் வெளிப்படையாக உணர்த்தாமல், குறிப்பாக உணர்த்திக் திணை பால் காட்டும் விகுதியுடன் முற்றுப் பெற்றுள்ளது. எனவே, நல்லவன் என்பது குறிப்பு வினை முற்றாகும்.

(குறிப்புப் பெயரெச்சம்)

நல்ல பையன்

இங்கு, ‘நல்ல’ என்பது தொழிலையும் காலத்தையும் குறிப்பாக உணர்த்திப் பையன் என்ற பெயரைச் சார்ந்து முற்றுப் பெறுகிறது. எனவே, ‘நல்ல’ என்பது குறிப்புப் பெயரெச்சமாகும்.