பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்67

(2) அவன் உண்டான்
உண்டான் (உண்+ட்+ஆன்) ட்-இடைநிலை, ஆன்-விகுதி.

(3)அவற்றைத் தந்தான்
அவற்றை (அவ்+அற்று+ஐ) அற்று-சாரியை

(4)மயில் போல ஆடினாள்
போல-உவம உருபு

(5)அவன்தான் சொன்னான்
தான்-தேற்றப்பொருள் (தத்தம் பொருள் உணர்த்தும் இடைச் சொல்)

(6)ஏஎ இவள் ஒருத்தி
ஏஎ-இசைநிறை

(7)நாடாமால் ஊராமால்
ஆல்-அசைநிலை

(8)மழை சோவெனப் பெய்தது
சோவென-ஒலிக்குறிப்பு

நெஞ்சம் திடுக்கென நடுங்கியது

திடுக்கென- அச்சக்குறிப்பு

பொருக்கென எழுந்தான்

பொருக்கென - விரைவுக்குறிப்பு

இவை யாவும் எட்டுவகையினவாய் வந்த இடைச்சொற் களாகும். இனி, அகத்துறுப்பாயும் புறத்துறுப்பாயும் ஒன்றும் பலவுமாகப் பின்னும் முன்னும் வருவனவற்றைப் பார்ப்போம்.

குழையன் (குழை+அன்)

இங்கு, ‘அன்’ என்ற விகுதியிடைச்சொல் மட்டும், பெயரின் அகத்துறுப்பாய் வந்துள்ளது.