68 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
நிலத்தினன் (நிலம்+த்+த்+இன்+அன்) இங்கு ‘த்-இன்-அன்’ என முறையே இடை நிலையும், சாரியையும், விகுதியுமாகிய பல இடைச்சொற்கள் பெயரின் அகத்துறுப்பாய் வந்துள்ளன. உண்ணாய் (உண்+ஆய்) இங்கு ‘ஆய்’ என்ற விகுதியிடைச்சொல் மட்டும், வினையின் அகத்துறுப்பாய் வந்துள்ளது. நடந்தனன் (நட+த்(ந்)+த்+அன்+அன்) இங்கு, ‘த்-அன்-அன்’ என முறையே இடைநிலையும், சாரியையும், விகுதியுமாகிய பல இடைச்சொற்கள் வினையின் அகத்துறுப்பாய் வந்துள்ளன. அதுமன் - கொன்னூர் இங்கு , ‘மன்’ என்னும் இடைச்சொல்லும் ‘கொன்’ என் னும் இடைச்சொல்லும் பெயருக்குப் பின்னும் முன்னும் புறத்துறப்பாய்த் தனித்து வந்துள்ளன. அது மற்றம்ம - இனி மற்றொன்று இங்கு, ‘மற்று-அம்ம’ என்ற இடைச்சொற்களும், ‘மற்று-ஒன்று’ என்ற இடைச்சொற்களும் பெயருக்குப் பின்னும் முன்னும் புறத்துறுப்பாய்ப் பலவாக வந்துள்ளன. வந்தானோ - ஐயோ விழுந்தான் இங்க, ‘ஓ-ஐயோ’ என்ற இடைச்சொற்கள் வினையின் புறத்துறப்பாய்த் தனித்து வந்துள்ளன. கொன்றான் கூகூ-சீசீ போ இங்கே, ‘கூகூ’ என்ற இடைச்சொற்களும், ‘சீசீ’ என்ற இடைச் சொற்களும், வினைக்குப் பின்னும் முன்னும் புறத்துறுப்பாய்ப் பலவாக வந்துள்ளன. தத்தம் பொருள் தரும் இடைச்சொற்கள் தெரிநிலை, தேற்றம், ஐயம், முற்று என்பன போன்ற பல பொருள்களில் வரும். |