பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்69

இனி, நன்னூல் (421) நூற்பாவுள் ‘இன்னன’ என்றதனால் வரும் இடைச்சொற்களைப் பார்ப்போம்.

அவன்-இவன்-உவன்

அ-இ-உ சுட்டுப் பொருளைத் தருகின்ற இடைச்சொற் களாகும்.

எது-ஏது-யாது-அவனா-அவனோ

எ-ஏ-யா-ஆ-ஓ வினாப்பொருளைத் தருகின்ற இடைச் சொற்களாகும்.

நக்கீரர்

ந-சிறப்புப் பொருளைத் தருகின்ற இடைச்சொல்லாகும்.

இனிச்செல்வான் - இனி எம்மெல்லை

‘இனி’ என்பது கால இடங்களின் எல்லைப் பொருளைத் தரும் இடைச் சொல்லாகும்.

அறிதொறறியாமை

சேரி தோறிது

‘தொறு-தோறு’ என்பன இடப்பன்மைப் பொருள்தரும் இடைச்சொற்களாகும்.

அந்தோ இழந்தான்
அ ஆ என்ன உயரம்

‘அந்தோ,’ என்னும் சொல் இரக்கப்பொருளையும், ‘அஆ’ என்னும் சொல் வியப்புப் பொருளையும் தரும் இடைச்சொற் களாகும்.

வாளா இருந்தான்
சும்மா இருந்தான்

‘வாளா-சும்மா’ என்பன பயனின்மைப் பொருளைத்தரும் இடைச் சொற்களாகும். இவை தவிர, இன்னும் வருவனவும் உள.

இலக்கண விதி: ஐ முதலிய வேற்றுமை உருபுகளும், விகதிகளும் இடைநிலைகளுமாகிய வினை உருபுகளும், அன்-ஆன்