பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்77

2.அறியாவினா:

மாணவன், ஆசிரியரை நோக்கி ‘எட்டுத்தொகை ஜ்நல்கள் யாவை?’ என வினவுதல், அறியாமையால் அவற்றை அறிந்து கொள்ள எண்ணி வினவப்படுதலின் அறியாவினா எனப்படும்.

3.ஐயவினா:

‘அவ் வடிவம் குற்றியோ மகனோ?’ என ஒருவர் வினவுதல், ஒன்றிலும் துணிவு பிறவாது வினவப்படுதலின் ஐயவினா எனப் படும். (குற்றிமரக்கட்டை)

4.கொளல்வினா:

‘பயறு உளதோ வணிகரே?’ என வினவுதல் அதனைக் கொள்ளும் பொருட்டு வினவப்படுதலின் கொளல்வினா எனப்படும்.

5.கொடைவினா:

‘சாத்தா உனக்கு ஆடையில்லையா?’ என வினவுதல், அவனுக்கு ஆடையைக் கொடுக்கும் நோக்கமுடன் வினவப்படு தலின் கொடை வினா எனப்படும்.

6.ஏவல் வினா:

‘சாத்தா உண்டாயா?’ என வினவுதல், அவனை உண்ணுமாறு ஏவும் பொருட்டு வினவப்படுதலின் ஏவல்வினா எனப்படும்.

இலக்கண விதி: அறிதலும், அறியாமையும், ஐயுறலும், கொள்ளுதலும், கொடுத்தலும், ஏவுதலுமாகிய அறுவகைப் பொருளையும் நீக்காது, வினா வகையாகக் கொள்வர்.

அறிவறி யாமை யையுறல் கொளல்கொடை
ஏவ றரும்வினா வாறு மிழுக்கார்.

(ந-நூற்பா 385)

2. விடை வகை

‘மதுரைக்கு வழி யாது?’ - இஃது
‘நீ சனம் கொள்வாயா?’ - கொள்ளேன்