96 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
அவற்றுள் சில வருமாறு: யாது - யாவது என வருவது தோன்றல் விகாரமாகும். கண்ணகல் பரப்பு - கண்ணகன் பரப்பு என வருவது திரிதல் விகாரமாகம். யானை - ஆணை என வருவது நீளல் விகாரமாகும். பெயர் - பேர் என வருவது நீளல் விகாரமாகும். தசை -சதை என வருவது எழுத்து நிலைமாறுதல் விகாரமாகும். இவ்வாய் - வாயில் என வருவது சொல் நிலைமாறுதல் விகாரமாகம். இலக்கண விதி: மெல்லொற்றை வல்லொற்றாக்கலும், வல்லொற்றை மெல்லொற்றாக்கலும், குற்றறெழுத்தை நெட்டெழுத் க்கலும், நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக்க லும், இல்லாத எழுத்தை வருவித்தலும், உள்ள எழுத்தை நீக்கலும், செய்யுளிடத்து அடி, தொடை முதலானவைகளை நோக்கி அமைக்க வேண்டு மிடத்து வருவனவும் செய்யுள் விகாரமாகும். இலக்கண விதி: அடி, தொடை முதலானவைகளை நோக்கி, ஒரு மொழி ‘முதல், இடை, கடை’ என மூன்றிடத்தும் குறைந்து வருதலும் செய்யுள் விகாரமாகம். வலித்தன் மெலித்த னீட்டல் குறுக்கல் விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி. (ந-நூற்பா 155.) ஒரு மொழி மூவழிக் குறைதலு மனைத்தே. (ந-நூற்பா 156.) 3.ணகர, னகர-யகர,ரகர,ழகர-லகர,ளகர ஈற்றுப்புணர்ச்சி (1) ணகர, னகர ஈற்றுப்புணர்ச்சி (வேற்றுமை) மண்+கலம்=மட்கலம்பொன்+கலம்=பொற்கலம் மண்+குடம்= மட்குடம்பொன்+குடம்=பொற்குடம் இவ்வாறு, வேற்றுமையிலே வல்லினம்வரின், ணகர னகர ஈறுகள் முறையே டகரமாகவும், றகரமாகவும் திரியும். |