பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்99

ணகரமாகவும், னகரமாகவும் திரியும் பொழுது, நிலைமொழி ணகர, னகர ஈறுகள் கெட்டுப் புணரும்.

இலக்கண விதி: குறில் ஒன்றனையும் சாராது, ஒருமொழி தொடர் மொழிகளைச் சார்ந்த ணகர, னகர ஈறுகள், வருமொழிக்கு முதலாக வந்த நகரம் மயக்கவிதி இன்மையினாலே திரிந்தவிடத்துத் தாம் கெடுதலைப் பொருந்தும்.

குறிலணை வில்லா ணனக்கள் வந்த
நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே.

(ந-நூற்பா 210.)

2. யகர, ரகர, ழகர ஈற்றுப்புணர்ச்சி

(அல்வழி)

(எழுவாய்த்தொடர்-இயல்பு)

வேய்+குறிது=வேய்குறிது

வேர்+சிறிது=வேர்சிறிது

யாழ்+பெரிது= யாழ்பெரிது

இவ்வாறு, அல்வழி எழுவாய்த் தொடரில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க,ச,த,பக்கள் இயல்பாகும்.

(உம்மைத்தொகை-இயல்பு)

பேய்+பூதம்=பேய்பூதம்

நீர்+கானல்=நீர்க்கானல்

இகழ்+புகழ்=இகழ்புகழ்

இவ்வாறு, அல்வழி உம்மைத் தொகையில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் இயல்பாகும்.

(வினைத்தொகை-இயல்பு)

செய்+கடன்=செய்கடன்

தேர்+பொருள்=தேர்பொருள்

வீழ்+புனல்=வீழ்புனல்