பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்9

'பூங்கொடி' நூலுக்குத் தமிழ்நாடு அரசு தடை செய்ய ஏற்பாடு (1966).

ஆட்சிமாற்றத்தால் 'பூங்கொடி' தடை ஏற்பாடு விலக்கம் (1967).

தமிழாசிரியப் பணி ஓய்வு (1978).

மதுரைப் பல்கலைக்கழகம் தமிழியற் புலத்தில் நாடகக் காப்பியப் பணி (1985).

திராவிட நாடு, முரசொலி, முத்தாரம், குடியரசு, விடுதலை. போர்வாள், முல்லை, எழில், தென்றல், மன்றம், அழகு, முருகு, பொன்னி, குயில், கதிரவன், நம்நாடு, வாரச் செய்தி, பிரசண்ட விகடன், தமிழ்ப்பாவை, காதல், தாமரை, புதுவாழ்வு, தனியரசு, சங்கொலி, வாழ்வு, தோழன், திராவிடமணி, தமிழ்ச்சுவை, தமிழ், போர்முரசு, பாசறை, இன முரசு, இன முழக்கம், நித்திலக் குவியல், செந்தமிழ்ச் செல்வி, கலைக் கதிர், அமுத சுரபி, கழகக் குரல், மறவன் மடல், சமநீதி, உரிமை வேட்கை, தென்னரசு, தென்னகம், தமிழ் முரசு, தமிழ்நாடு, அலை ஓசை, தமிழ்நேசன் (மலேசியா) கவிதை, முல்லைச் சரம், தமிழரசு, குங்குமம்,தினமணி கதிர், தினமணி ஆகிய இதழ் களிலும் மற்றும் பல்வேறு இதழ்களிலும் கவிஞர் தமது எழுத்தோவியங் களைத் தீட்டியுள்ளார்.

கவிஞரது கவிதைகள் பல சாகித்திய அகாதமியால் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. உருசிய மொழியிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.

கவிஞரின் நூல்கள் பல்கலைக் கழகங்கள் மற்றும் பள்ளி களில் பாட நுல்களாக வைக்கப்பட்டுள்ளன.

கவிஞரின் நூல்கள் குறித்துப் பலர், பல்வேறு பல்கலைக் கழகங்களில் ஆய்வேடுகள் அளித்து 'முனைவர்' (P.hd), ‘இளமுனைவர்’ (M.Phil) பட்டங்கள் பெற்றுள்ளனர்.