பக்கம் எண் :

114கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

மென்பது வள்ளுவத்தின் வாய்மொழி. ஒப்புரவினால் வருங் கேடு, கேடாக மதிக்கப்படுவதில்லை; உயர்ந்த புகழுக் குரியதாகவே கருதப்படும். ஆதலின், ஒப்புரவறிதல் கடமை யென்றுணர்ந்து, கைம்மாறு கருதாது, வேளாண்மை செய்து, வறுமைக் காலத்தும் வழுவாது நின்று உலகுக்குதவியாக வாழ்வாயாக.

"தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு".

இங்ஙனம்
அறிவுடை நம்பி.

