152 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
14 பணிவுடன் பழகு அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன். தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைப் படித்ததாக எழுதியிருந்தாய். அஃது அவராலேயே எழுதப்பட்ட நூலாகும். அவரைப் போன்ற பெருமக்களுடைய வரலாற்றைப் படித்துப் பயன்பெறுவது வேண்டப்படும் ஒன்றாகும். தகுதி யில்லாத, ஒரு வகையிலும் பயன்படாத, நாட்டுக்கு நன்மை தராத வாழ்க்கை வரலாறுகளை, வாழ்க்கை வரலாறு என்னும் பெயரால் வெளிவரும் காகிதக் குப்பைகளை இளைஞர் பலர் படித்துத் தம்மைத் தாமே பாழ்படுத்திக் கொள்கின்றனர். அந்த வரலாற்றுக் குரியோர் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, உறங்கப் போகும் நேரம், அவர்க்குத் திருமணஞ் செய்து கொள்ள விருப்பம் உண்டா இல்லையா, உண்டென்றால் யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர் என்ற இத்தகைய வரலாற்றுக் குறிப்புகளைப் படிப்ப தால் யாது பயன்? புழுத்துப் போன அவ்வாழ்க்கைக் குறிப்புகளில் பொய்ம்மைக் குறிப்புகளே மலிந்து கிடக்கும். இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். திரு.வி.க.வரலாறு, நாட்டு வரலாற்றோடு பின்னிப் பிணைந் திருப்பது; நாமுங் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியது. அவர் வரலாற்றிலிருந்து நீ கற்றுத் தெளிந்து பின்பற்ற வேண்டிய பண் பொன்றினை உனக்கெழுத விரும்புகின்றேன். அவர் ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்; தாய்மொழிப் புலமையும், பிறமொழிப் புலமையும் நிறையப் பெற்றவர்; நாநலம் மிக்க நாவலர்; கற்றாரும் மிக்காரும் ஒருங்கே போற்றும் புகழ்ச்செல்வம் படைத்தவர். நாட்டுப் பெருந்தலைவருள் ஒருவர்; தந்நேரிலாத் |