யிருக்கிறது. அதில் தனித்தமிழ் இயக்கத்தைக் கிண்டல் செய்யும் முறைதான் நமக்கு ஆறாத்துயரைத் தருகிறது. இதோ அவர் எழுதியிருப்பதைப் பார். "தனித்தமிழ் என்கிற மொழிச்சிக்கலாகிய மலச்சிக்கல்" என்னும் வகையிலே எழுதியிருக்கிறது அந்த ஆசிரியர் கை. அந்தக் கை எத்தகையது? தமிழை எழுதுங் கை; தமிழை எழுதிப் பணம் வாங்குங் கை. அப் பணத்தாற் சோறுண்ணுங் கை. அந்தக் கையிலிருந்துதான் வருகிறது அந்த 'மலச்சிக்கல்'. நன்றி கெட்ட பிறவிகள். தம் புகழுக்காக, உயர்வுக்காக, நன்றி கெட்ட பிறவிகள் தமிழ்மொழியையும் தமிழினத்தையும் ஏளனம் செய்யும் இவர்களும் தமிழர்களாம்; இப்படி ஏளனம் செய்வதைப் பார்த்து பின்னரும் தமிழ் மகனுக்குச் சூடு, சொரணை தோன்ற வில்லையென்றால் அவனை என்னென்று சொல்வது? என்றுதான் உணர்ச்சி பெறு வானோ தெரியவில்லை. உன் தந்தை முடியரசன் |