'நாமென்ன செய்வதா? நன்றாக இருக்கிறது உன் கேள்வி! வீட்டிலே புரட்சி செய்ய முடியாவிட்டால் நாட்டிலே எப்படிப் புரட்சி செய்ய முடியும்? அவள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையில் நீ எடுத்துச் சொல்ல வேண்டும்'. 'நீங்கள் தான் இனிச் சொல்ல வேண்டும்'. 'சரி நானே அதற்கு ஏற்பாடு செய்கிறேன்' அன்று மாலை எக்கோ, மாடியில் கைகளைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்த வண்ணம் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். மல்லிகா வெளியிற் சென்றிருந்தாள். அவள் தங்கை மாடிக்கு வந்தாள். வருவதைப் பார்த்ததும், 'வாம்மா! உன்னிடம் சில செய்திகள் சொல்ல வேண்டுமென்று எண்ணி யிருந்தேன். நீயே வந்து விட்டாய்! உன் மறுமணம் பற்றி நான் ...' என்று சொல்லி முடிக்குமுன் குறுக்கிட்டுப் பேசினாள். 'என் திருமணத்தில் உங்களுக்கு இவ்வளவு அக்கறை இருக் கிறதா?' என்றாள். 'என்ன அப்படிக் கேட்கிறாய்!' நான் எவரையும் அன்போடு நேசிக்கிறேன். இந்த நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் - எல்லா நாட்டு மக்களும் தோழர்களாக இருக்க வேண்டு மென்ற கொள்கை யுடையவன். அந்த எண்ணம் எங்கும் பரவி ஒளிவிடவேண்டும் என்று எண்ணி உருகுபவர்களிலே நானும் ஒருவன். அப்படிப் பட்டவன் உன்னிடத்தில் மட்டும் அக்கறை கொள்ளாமல் இருப் பானா?' என்று முடித்தான். அவன் பேச்சில் அன்பு குழைந்திருந்தது. 'அப்படியானால் இதோ இதைப் பாருங்கள்' என்று ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்துவிட்டு விரைந்து சென்று விட்டாள். அவன் வியப்புடன் பிரித்துப் பார்த்தான். 'அன்புடையீர்! முதலில் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரே கொடியில் இரண்டு அரும்புகள் தோன்றின. ஆனால் ஓரரும்பு மலருமுன் கீழே விழுந்து விட்டது. மற்றொன்று மொட்டாகி - போதாகி - மலராகி - தேன் நிறைந்து மணம் வீசிக் கொடியில் சிரித்துக் கொண்டிருக்கிறது. உதிர்ந்த அரும்பு வாடிக் கொண் டிருக்கும் நிலையில், சிரிக்கும் மலரைக் கண்டு நாமும் ஏன் அப்படியிருக்கக் கூடாது என்று பேராசைப் படுகிறது. பக்கத்தி லிருந்த முல்லை சொல்கிறது. போடி பைத்தியக்காரி உதிர்ந்த பிறகு |