126 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
என்று இகழப்படுவாள். இச்சிறு தண்டனைக்கே கலங்கும் நீ நாளை எனக்குத் தூக்குத் தண்டனை தந்தால் மகிழ்ச்சியடையும் தமிழ்ப் பெண்ணாகவா உன்னைப் பார்க்க முடியும்? இப்படிப்பட்ட உன்னை, 'கொரில்லாப் பெண்' என்று எண்ணிக் கொண்டிருக் கிறாயே! இது, உனக்கு மட்டுமின்றி - உன் இனத்திற்கே - பெண்கள் கூட்டத்திற்கே இழிவைத் தரும்' என்று கண்டிப்பான குரலில் பேசினான். 'கொரில்லாப் பெண்! கொரில்லாப் பெண்!' இந்தச் சொற்கள் சுழன்று சுழன்று வந்து அவள் செவியில் மோதின. நிமிர்ந்து நின்றாள். கண்களைத் துடைத்துக்கொண்டாள். 'ஆம், மறந்து விட்டேன்; மன்னிக்கவும். நள்ளிரவு என்றும் பாராமல் கைது செய்ய வருகின்ற அரசாங்கம் நல்ல அரசாங் கந்தான். அதுவும் என்ன குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டது? மக்கள்நிலை உயரவேண்டும் என்று கூறியது ஒரு குற்றமா? அதைப் பற்றித் தன் கருத்தை எழுதியது ஒரு குற்றமா? இல்லை மக்கள் நிலை உயரக் கூடாது என்று அரசாங்கம் கருதுகிறதா? அப்படிப்பட்ட அரசாங்கந்தான் எதற்கிருக்கிறது? ம்ம், அதை ஏன் நாம் குறைகூற வேண்டும்? மக்கள் உணர்ந்தால் - அறிவுபெற்றால் தானாகவே எல்லாம் மாறுகிறது. சரி, நீங்கள் போகலாம்; மகிழ்ச்சியோடு விடை தருகிறேன். உங்கள் பணியை நான் மேற்கொள்கிறேன். விரைவில் நானும் உங்களைச் சந்திப்பேன். தன் கணவன் குற்ற மற்றவன் என்று, முடியுடை வேந்தன் எனவும் பாராது வீரத்தோடு வாதாடிய கண்ணகி என் குலத்தில் பிறந்தவள் தான். மக்கள் மன்றம் இருக்கவே இருக்கிறது. அரசாங்கத்தை அந்த மன்றத்தின் கூண்டிலே நிறுத்துகிறேன். நீதிதேவன் தீர்ப்பளிக்கட்டும்' - என்று சொல்லி முடித்தாள். முகம் சிவந்திருந்தது. உதடுகள் துடித்தன. 'மல்லிகா! உன் நெஞ்சமும் இரும்பாகட்டும், உங்களுக்குக் காதல் இல்லையா என்று கேட்டாயே! இதோ என் காதல் பலித்து விட்டது. என் காதல் எல்லாம் நாட்டின் விடுதலை மீதுதான். நாட்டுக்காக உழைக்க வேண்டும் - உழைத்து உழைத்து உருமாற வேண்டும். அதற்காக நான் இரத்தம் சிந்த வேண்டும் - அந்த இரத்தம் மக்கள் வாழ்வு மலர்வதற்கு நீராக வேண்டும். நான் எதிரியால் தாக்கப்பட்டோ, அரசாங்கத்தின் தண்டனை பெற்றோ சாகவேண்டும். அந்தச் சாதல்தான் என்காதல். அந்தக் காதல் |