146 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
சென்றேன். நான்கு கண்களும் எவ்வளவு பேச்சுகள் பேசின. அப்பப்பா! நெடுநேரம் கழிந்தது. பின்னர் வாய்கள் பேசத் தொடங்கின. பேச்சின் முடிவிலேதான் இது, தோழன் வேலனுடைய வேலை என்று தெரிந்து கொண்டேன். எங்களைச் சந்திக்கச் செய்ய வேண்டு மென்றே அவன் இந்தச் சூழ்ச்சி செய்துள்ளான். அங்கே இருவரும் காதல் தெய்வத்தின் மீது ஆணையிட்டு உறுதி செய்து கொண்டோம். அதன் பின் எங்கள் நெஞ்சங்கள் சந்தித்தன. அந்தச் சந்திப்பில் வேலனும் மரகதமும் எங்கள் தெய்வங் களாகக் காட்சியளித்தனர். சுருங்கச் சொன்னால் கண்மூடி வழக்கத் திற்குக் குழி தோண்டிவிட்டோம். மண்கொட்டி மூடிவிட வேண்டியது தான் பாக்கி. கண்மூடி வழக்கத்திற்கு நாங்கள் இருவரும் குழி தோண்டி னோம். மண் போட்டு மூட வேண்டுமே. அதற்கு அவளுடைய பெற்றோரின் உதவியை நாடினோம். உதவி செய்ய மறுத்து விட்டனர். உள்ளம் இடங்கொடுத்தாலும் சமூகம் அவர்களைச் 'சரி' என்று சொல்லவிடாமல் தடை செய்கிறது. கடைசியாக எப்படியோ அவர்களை உடன்படச் செய்துவிட்டான் வேலன். புனிதத்தின் பெற்றோர்கள் புலன்விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்குப் பின் எனக்குத் தண்டனை தரப்பட்டது. "புனிதம் உன் சொத்தில்லை" என்று. ஏன்? என்று எதிர் வழக்காடினேன். நீ'ஏழையாகப் பிறந்தது ஒரு குற்றம். அதை மன்னித்து விட்டாலும் வேறு சாதியில் பிறந்த இரண்டாவது குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது' என்றனர். குற்றவாளியானேன். 'வேலா! இனி என்ன செய்வேன்? 'ஏழை', 'வேறு சாதி' இந்தக் குற்றங்களுக்காக என் சொத்துப் பறிமுதல் செய்யப் பட்டது! 'துரை! நீயா இப்படிக் கலங்குவது. அவை உன் குற்றமல்ல. இன்றுள்ள சட்டப்படி அவை குற்றமாகின்றன. அந்தச் சுயநலக் கும்பல் வகுத்த சட்டம். மனிதனை நசுக்குவதற்காக மனிதனாலேயே செய்யப்பட்ட சட்டம். சட்டம் என்றைக்கும் ஒரே மாதிரியான நிலையில் இருக்காது. சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் அல்லது கொளுத்த வேண்டும். அதன் பின்புதான் நீ குற்றவாளி இல்லை என்பதை மெய்ப்பிக்க முடியும்' என்று பரிந்து பேசினான். |