பக்கம் எண் :

எக்கோவின் காதல்167

6
காக்கையின் கடிதங்கள்

பாரதிதாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் அன்று. பெருங் கூட்டம். கடல்கடந்த தமிழர்கள் தமது தாய்நாட்டில் தோன்றிய - ஒப்பற்ற புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழாவைத் தமிழகத்தை விட உயர்வாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தோடு சிங்கப் பூர்த்தெருக்களையெல்லாம் தோரணங்களாலும் காகிதப்பூக் களாலும் ஒரே அழகாக அலங்கரித் திருந்தார்கள். அன்று சிங்கப்பூர் புதுமாதிரியான அழகுடன் விளங்கியது. பலபேர் கவிஞரைப் பாராட்டினர்.

அவருடைய கவிதை நயங்களை - உவமைத் திறங்களை யெல்லாம் சுவைபடப் பேசினார்கள். பேசும்பொழுது ஒருவர் "சுயமரியாதை கொள் தோழா!" என்ற பாட்டைப் பாடினார். அவ்வளவுதான் எனக்கு ஒரே குழப்பம். தலை சுழன்றது. முகம் கருத்தது. எனது மாற்றத்தைக் கண்ட என் மனைவி - இல்லை - என் காதலி "ஏன் இப்படிப் பித்து பிடித்தது போல் இருக்கிறீர்கள்?" என்றாள். 'ஒன்றுமில்லை' என்று சொல்லி வியர்வையைத் துடைத்துக் கொண்டு 'வா போகலாம்' என்று புறப்பட்டு விட்டேன்.

அவளும் என்னுடன் வந்தாள். "ஏன் இப்படிப் பாதியிலேயே வந்து விட்டீர்கள்?" என்றாள்.

"ஒன்றுமில்லை"

"ஒன்றுமில்லையா? என்னிடங் கூட மறைத்துப் பேசுகின் றீர்களே" என்று கெஞ்சிக் கேட்டாள் கமலம்.

"அஃது.. என் .... சொந்த...ஊரில்...ஒன்றுமில்லை. கமலா! அங்குப் பாடிய பாட்டு - சுயமரியாதைப் பாட்டு இருக்கிறதே. அஃது என் வாழ்நாளில் முக்கிய பகுதியைப் பற்றிக் கொண்டுள்ள பாட்டு. எனது இறந்த கால எண்ணங்களைத் தூண்டிவிட்டது. அதைப் பற்றி ஒன்றுங் கேட்காதே கமலா! பைத்தியம் பிடித்து விடும்போல் இருக்கிறது. சமயம் நேரும்போது சொல்லுகிறேன்."