170 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
என்று சொல்லுவார். அதன்படியே புடவையும் வந்துவிடும். பின்னர் என்றைக்காவது சொல்லுவார் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதிக் கொடுத்து, அந்தப் பணத்தால் வாங்கினேன் என்று. அவரிடம் ஒரே ஒரு கெட்ட குணம் இருக்கிறதம்மா! சும்மா பேசும்பொழுது நல்ல தமிழில் பேசு! நல்ல தமிழில் பேசு! என்று தொந்தரவு செய்கிறார்; சமஸ்கிருதம் என்று கூடச் சொல்லக் கூடாது. வடமொழி என்று சொல்லு என்றெல்லாம் தொந்தரவு செய்கிறார். எனக்குக் கஷ்டமாக - இல்லையில்லை - துன்பமா யிருக்கிறது. மற்ற வகையில் குறைவில்லாமல் இருக்கிறோம். வள்ளி. ***** அம்மா! நலம். இப்பொழுது உன் மகள் தமிழ்ப் புலமை மிக்காள். என் புலமையைக் காட்டி முடங்கல் (கடிதம்) வரைவேன். ஆனால் உனக்கு விளங்காதே என்றுதான் எளிய நடையில் எழுதுகிறேன். முன் கடிதத்தில் அவர் கூறுவதெல்லாம் தொல்லை யாயிருக் கிறது என்றல்லவா எழுதியிருந்தேன். அஃது என் அறியாமை. என்போன்ற பெண்களெல்லாம் நமது தாய் மொழியைப் புறக்கணித்ததால்தான் இந்த இழிநிலை வந்துள்ளது. இப்பொழுது எனக்கு நல்ல தமிழ் அறிவை ஊட்டி விட்டார். தனித்தமிழில்தான் உரையாடுவோம். இலக்கியங் களை இருவருமே சுவைப்போம். கல்வியழகை உணர்ந்தபிறகே நகையழகை மறந்தேன். அவர் பள்ளியிலிருந்து வரும் பொழுது 'காக்கை!' என்று அழைத்துக் கொண்டே வருவார். 'வருக, வருக' என்று என் சிரித்த முகம் வரவேற்கும். காக்கை என்றதும் உனக்கு ஒன்றுமே புரியாது; அஃது என் பெயர். அவர் அருமையாக இட்ட பெயர். வள்ளி - ஆறுமுகம் பொருத்தமான பெயராயிருந்தாலும் அவருக்கு அது பிடிக்க வில்லை. அவர் பெயரை நக்கீரன் என்று மாற்றிக் கொண்டார். எனக்கும் காக்கை பாடினியார் என்ற பெயரைச் சூட்டினார். அதன் சுருக்கமாகத்தான் 'காக்கை!' என்று என்னை அன்போடு அழைக் கிறார். |