பக்கம் எண் :

எக்கோவின் காதல்171

லில்லி, ரோசு, ரமணிபாய் என்ற இந்தப் பெயர்களை விட எனக்குக் காக்கை என்ற பெயர் மிகமிகப் பிடித்திருக்கிறது.

இங்ஙனம்
காக்கைபாடினியார்.

*****

இந்தக் கடிதங்கள் படிக்கப் படிக்கச் சுவையாக இருந்தன. மேலும் படித்தேன்.

அம்மா!

இருவரும் நலமே. உங்கள் கடிதத்தில் கடவுள் எனக்கு நன்னிலையைக் கொடுத்தார் என்று எழுதியிருந்தீர்கள். அந்த நிலையைக் கடவுளும் கொடுக்க வில்லை, யாருங் கொடுக்க வில்லை. அவருடைய முயற்சியும் என் அறிவுந்தான் எங்கள் மகிழ்ச்சிக்குக் காரணம். கடவுள் கொடுத்ததாயிருந்தால் பணத்தைக் கொடுத்திருக்கலாமே! இன்னும் அவர் சம்பளம் அப்படியேதான் இருக்கிறது. ஒரு சல்லிகூட உயரவில்லை! ஏதோ அவர் ஊட்டிய அறிவாலும் அன்பாலுந்தான் நாங்கள் கவலையற்று இடுக்கண் களைந்து வாழ்கிறோம்.

கடவுள் கொள்கையைப் பற்றியும் அடிக்கடி நாங்கள் பேசிக் கொள்வோம். தன் முயற்சியில் நம்பிக்கையிழந்தவரும், சுயநலத் தாருந்தான் அந்தச் சொல்லைத் துணைக்கழைப்பார்கள். பாரதியார் கூட "சிவலோகம் வைகுந்தம் என்பதெல்லாம் பித்தர்களின் கூற்று" என்று சொல்லியிருக்கிறார். இப்போது உயிரோடுள்ள - சென்னையி லேயிருக்கின்றன வ.ரா. என்ற அறிஞர் கூட, கடவுள், விதி என்ப தெல்லாம் "சுத்தப்பொய்" என்று கூறுகிறார்.

"கடவுள் நரகம் என்பதெல்லாம் மக்களை ஏய்ப்பதற்காக ஒரு கூட்டத்தால் அமைக்கப்பட்ட எழுத்துக் கூட்டங்கள்" என்று எங்கோ படித்த நினைப்பிருக்கிறது. இப்படியெல்லாம் அறிஞர்கள் தன்னம்பிக்கையில்தான் உறுதி வேண்டும் என்று சொல்லியிருக் கிறார்கள். இதை எல்லாம் எழுதினால் நீ என்னைப் பற்றித் தவறான எண்ணங் கொள்வாய் என்று இந்த அளவுடன் நிறுத்துகிறேன்.

வணக்கம்.
காக்கை.

*****