பக்கம் எண் :

எக்கோவின் காதல்175

அது கோபதத்தைக் கிளறி விட்டது. வெறுப்பு - பொறாமை இவற்றோடு கோபமும் சேர்ந்தது. என்னைப் போலவே கிருஷ்ண மாச்சாரி என்பவனும் ஒருவன் இருந்தான். இருவரும் மந்திராலோ சனை செய்தோம். அவன் என்னை ஏவினான். நான் எனது கத்தியை ஏவினேன். நக்கீரன் கொலை யுண்டான். நான் கொலைக்காரன் ஆனேன்.

"செய்தி பரவுவதற்கு முன் சென்னையை விட்டுக் கிளம்பி னேன். சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன். இங்கு, உன்னை - யாருக்குப் பெருங்கேட்டை விளைத்தேனோ அவள் தங்கை யையே மணந் தேன். அவள் கணவனைக் கொன்றுவிட்டு, அவளுடைய தங்கைக்குக் கணவன் ஆனேன்.

"அவன் அடிக்கடி பாடுகின்ற பாட்டுத்தான் சுய மரியாதைப் பாட்டு. எந்த மேடையிலும் பாடுவான். அதைக் கேட்கும்போ தெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாகும். இப்பொழுது அந்தப் பாட்டைக் கேட்கும் பொழுது கொலை நினைவு வந்து விடுகிறது. அதனால் தான் அதைப் பாடவேண்டாம் என்கிறேன். அன்று பாரதிதாசன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாதியில் எழுந்துவரக் காரணமும் இதுதான்.

'இப்பொழுதுதான் உணருகிறேன்' கருத்து வேற்றுமைக் காக மனிதத் தன்மையை இழந்தோமே என்று. அதிலும் பிறன் ஏவலால் அறிவையிழந்து இந்தக் கொடுஞ்செயலைச் செய்துவிட்டேனே! இன்னும் என்னைப் போல எத்துணைப் பேர் தமிழகத்தில் இருக் கிறார்களோ? இனப்பற்று என்றுதான் வருமோ?

"கமலம்! உன் குடும்பத்தாருக்கும் உன் அக்காளுக்கும் இத்தகைய பெருந்தீங்கை இழைத்த என்னை மன்னிப்பாயா?" என்று கதறிவிட்டேன்.

அவள் அங்கிருந்தாலல்லவா என்னை மன்னிக்க முடியும்?