"என் உள்ளக் கொதிப்பை - அந்தக் கண்ணீரின் மதிப்பை உணருவாரா என் அப்பா. அவர் மட்டுமென்ன இந்த அநியாய உலகந்தான் உணருமா? அவள் பெற்ற உன்னை 'அவமானச் சின்னம்' என்று சொல்ல ஏன் தயங்கப் போகிறது இந்த உலகம்?" "அம்மா! அது கிடக்கட்டும். முழுதும் சொல்லுங்கள். அழாதீர்கள். அழுது ஆவதென்ன? நடந்தது நடந்து விட்டது. சொல்லுங்கள்! சொல்லுங்களம்மா?" "இதைப் படித்துப்பார்! பெயர்தான் கொஞ்சம் மாறி இருக்கிறது. மற்றதெல்லாம் என்கதை அப்படியே இருக்கிறது?" என்று புத்தகத் தைக் கொடுத்தாள். படித்துப் பார்த்தான். "சில மாதங்களில் என் தங்கைக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அவளுக்கு நகைகள் செய்ய ஒருவரிடம் கொடுத்தார்கள். அவர் சிறந்த வேலைக்காரர். நல்ல குணங்களும் உடையவர்; அழகாகவும் இருப்பார்; அவர்தான் இராமு ஆச்சாரியார். அவர் அடிக்கடி நகைகள் சம்பந்தமாக எங்கள் வீட்டிற்கு வந்து போவார். என் அப்பா முன் கோபக்காரர். ஆதலால் எப்படிப் பட்டவரி டத்திலே பேசினாலும் ஒரு தடவையாவது கோபம் வந்து விடும். ஆனால் நகை செய்யும் இவரிடம் ஒரு நாள் கூடக் கோபமாகப் பேசியதே கிடையாது. அப்பாவுக்குக் கோபம் வராதபடி அவர் பேசி மயக்கிவிடுவார். அன்பாகப் பேசுவார். சிரிப்பு எப்பொழுதும் அவர் முகத்தில் திகழ்ந்து கொண்டே யிருக்கும். அதனால் எவரை யும் கவர்ந்து விடுவார் பேச்சிலே. அவர் வந்துவிட்டால் நான் என்ன வேலையாயிருந்தாலும் ஓடிவந்து விடுவேன். நகைகளைப் பார்த்துக் கொண்டிருப் பார்கள் எல்லோரும். நான் அவர் பேச்சிலே சொக்கிப் போயிருப்பேன்." "ஒருநாள் மாலை, வைரத்தோடு செய்துகொண்டு என் அப்பாவிடம் காட்ட எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்பா வயலுக்குப் போயிருந்தார்." "நான்தான் அதைப் பார்த்துக் கொண்டே அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்." "நேரம் ஆகிவிட்டது. நாளை வருகிறேன்" என்றார். "இல்லையில்லை; இருங்கள். இப்பொழுது அப்பா வந்துவிடு வார்; அவரிடம் காட்டிவிட்டு அப்புறம் போகலாம்" என்றேன். |