பெயர் அங்கே பொறிக்கப்பட்டிருக்காது; அப்படியிருக்க நீ ஏதோ குடிமூழ்கிவிட்டது போலப் பேசுகிறாயே! " என்று மிகவும் சாதாரணமாக விடை தந்தான். "கண்ணா! நீயா பேசுகிறாய்! பணத்திற்கு உன் உள்ளம் பணிந்துவிட்டதா? உன் பெயர் பொறிக்கப் பட்டிருக்காது என்றால் மக்களை ஏமாற்றும் எண்ணமா உனக்கு? பணத்தை அன்று வெறுத் தாய். ஆனால் இன்று...? எத்துறையிலும் அடிமை கூடாது என்ற நீ, இன்று பணத்திற்கு அடிமையாக் கினாய் உன் உள்ளத்தை. அவ்வளவில் நின்றாயா? மாதர்கள் மையலிலும் மனத்தை அழுந்த விட்டு விட்டாயாமே? உன் போன்ற கவிஞனுக்கு இது அழகா? என்று மறுபடியும் கேட்டேன். "ஆம் நண்பா! நான் கவிஞன். கவி உள்ளம் என்பால் இருக்கிறது என்பதை நீயே ஒப்புக்கொள்கிறாய். அழகு எங்கெங்கு இருக்கிற தோ அங்கெல்லாம் மனத்தைப் பறிகொடுத்து விடுவான் கவிஞன். காக்கைச் சிறகினிலே - காட்டு மயில் தோகையிலே - எந்தப் பொருளிடத்தும் அழகைக் காண்கிறான் கவிஞன். அப்படியிருக்க இயல்பாகவே அமைந்த எவர் - கண்ணுக்கும் புலனாகின்ற மங்கையர் அழகு மட்டும் கவிஞன் கண்ணுக்கு மறைந்தா நிற்கும்? அழகில்லாத பொருளிடத்தும் அதைக்கண்ட நான் அரிவையர்பால் அழகின் வரம்பைக் கண்டேன். அழகை அனுபவிக்கிறேன். இதில் என்ன குற்றம்? அவர்களே வலியவரும் பொழுது .... என் மனம் என்ன கல்லா? அழகு எதற்கு? மனிதன் நுகரத்தானே?" "கண்ணா! என்ன பித்துப் பிடித்தவன் போலப் பிதற்றுகிறாய்! ஏன் இப்படிக் கெட்டுவிட்டது உன் மனம்? குற்றங்களை உன் புலமையால் மறைக்கப் பார்க்கிறாய். அது பொருந்தாது. இதனுடன் குடிக்கவும் பழகி விட்டாயாமே? அதற்கும் சமாதானம் சொல்வா யோ? வேண்டாம் கண்ணா? மக்கள் உன்னை நம்பியிருக்கிறார்கள்; அவர்கள் வாழ்வுக்கு வழி கோலுவாய் என்று எண்ணினேன். ஆனால், நீ செல்லும் வழி..?" "நண்பா! குடிப்பது கெடுதல் என்றா எண்ணுகிறாய்! இன்னும் நீ பத்தாம்பசலியாக அல்லவா இருக்கிறாய்! இதைக் கெடுதல் என்றால் காப்பியும் குடிதான். காப்பியிலாவது கெடுதல் உண்டு. நான் பயன்படுத்துவது பழச்சாறு. அவ்வளவும் இரத்தம் - உடலுக்கு உறுதி. பழச்சாறு கெடுதல் என்பது பைத்தியக்காரத்தனம்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். |