பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்63

அழகையெல்லாம் நாம் காண முடியுமா? ஆகவே, இக் கருத்துகளை எல்லாம் தெரிவிக்க, இடத்துக்கேற்ற சொல் கடவுள் என்ற சொல்லே யாகும். இன்னோரன்ன சொல்லாட்சிச் சிறப்புடைய இடங்கள் பலப்பல மிளிர்வதைக் காணலாம் இளங்கோ தந்த சிலம்பிலே.

சொல் நயம்

அடுத்தபடி, சொல்லானது வேறு பிற குறிப்புகளையும் உள்ளடக்கி நிற்கும் அழகைச் சிறிது காண்போம். குறிஞ்சிக் கலியில் ஒரு கட்டம். ஒரு தலைவிக்கு மணமுடிக்க முயல்கின்றனர் பெற்றோர். இதையறிந்த தோழி அறத்தொடு நிற்கிறாள். அறத் தொடு நிற்றலா வது, தலைவி மற்றொருவனை விரும்பியுள்ளாள் என்பதை நாகரிக மாக - அறமுறை பிறழாது - பெற்றோர் ஏற்கும் வண்ணம் உரைப்பது. உரைக்கின்றாள்: "ஒரு நாள் புதுப் புனலாடினோம்; வெள்ளம் தலைவியை அடித்துக்கொண்டு சென்றுவிட்டது. அப்பொழுது தற்செயலாக அங்கு வந்த காளை ஒருவன் தன் அருள் மிகுதியால், நீருட் பாய்ந்து அவளை மார்போடு அணைத்து வந்து கரை சேர்த்தான். அன்றுமுதல் அவனுக்கே உரியவளாகிவிட்டாள்" என்று புனைந் துரைக்கின்றாள். அத் தோழியின் கூற்றைக் கவிதையிலே காண் போம்.

"காமர் கடும்புனல் கலந்தெம்மோடு ஆடுவாள்
தாமரைக்கண் புதைத்தஞ்சித்
தளர்ந்ததனோ டொழுகலான்" - கலி. 39

இதுதான் அவள் கூற்று. "புனலாடுவாள்" என்று மட்டும் கூறியிருக்கலாம்; காமர், கடும்புனல், கலந்து, எம்மோடு, ஆடுவாள் - இத்தனை சொற்கள் ஏன்? என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால், கவிஞனுக்கு அத்தனையும் விலை மதிக்கமுடியாத மாணிக்கங்கள். அச்சொற்களில் குறிப்புப் பொருள்கள் இலைமறை காய்போல் இருத்தலைக் கூர்ந்து நோக்குவார் உணரலாகும்.

சொற்களுக்குள் நாமும் சிறிது நுழைவோம்; அடிகளாசிரியர் என்ற பேராசிரியர் நோக்கின்படி நயங்களைக் கண்டு இன்புறு வோம். புனலாடுவாள் ஆற்றொடு போனாள் என்று மட்டும் கூறியிருப்பின் தாய் சினங்கொள்வாள்; புதுப்புனல் ஆட ஏன் சென்றீர்? என்று சீறுவாள்; வெள்ளம் இழுத்துச் செல்லும் படியாக ஏன் விட்டுவிட்டீர்கள்? என்பாள்; நீங்களே அவளைக் கரை