இன்பம் சேர்க்கவும் யாழெடுத்துப் பாடு என்று இசைத் தமிழையும், 'அற்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக்காட்ட மாட்டா யா' என்று கூத்துத் தமிழையும் 'இறை வனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா' என்று இயற்றமிழையும் குறிப்பிடுவது நயக்கத் தக்கது. 'யாழெ டுத்துப் பாடு' என்றவுடன் வேற்று மொழிப் பாடலைப் பாடி விடின் துன்பம் போகாது, இன்பம் ஆகாது என்பதனால் 'தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா? எனத் தமிழிசை வேட்கை யையும் புலப்படுத்தி விடுகிறார் - கவிஞர். இப் பாடலைத் தண்டபாணி தேசிகர் உணர்ந்து பாடுவதைக் கேட்டோர் இதன் அருமை பெருமைகளை நன்கறிவர். விசை யொடிந்த தேகத்தில் விறுவிறுப்பை ஊட்டிய அதே நெருப்புக் குரல் ஊனை, உயிரை உருக்கும் இனிப்புக் குரலாகவும் கேட்பதுண்டு. கட்டுப்பாடற்ற கவிஞன் கவிஞன், கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவன். இலக்கண நெறிகளுக்குங் கூட அவன் கட்டுப்பட மாட்டான்; இலக்கணத் தையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து, அதனை ஏவல் கொள்ளும் அதிகாரம் படைத்தவன். எவ்வகைச் சட்ட திட்டங் களும், கட்டுப்பாடுகளும் அவனை அடிமைப் படுத்திவிட முடியாது; அடக்கியாளவும் முடியாது. தன் விருப்பம் போல் இன்ப வானில் சிறகடித்துத் திரியும் வானம்பாடிதான் கவிஞன். நம் கவிஞர் உள்ளமும் அத்தகையதே என்பதைப் பாவேந்தர் பாடல் நமக்குத் தெளிவு படுத்துகிறது. ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாள் 8.11.1946-ல் வருகிறது. அஃது அவருக்கு விடுதலை நாளாகத் தோன்றுகிறது. 'எட்டுப் பதினொன்று நாற்பத்தாறிட்ட எழிலுறு நாள்' என்னுங் கட்டளைக் கலித்துறைப் பாடலில், அந் நாளினை 'எழிலுறு நாள்' எனச் சுட்டுகிறார். அஃது அவருக்கு ஏன் எழிலுறு நாளா யிற்று? மேலதிகாரிகளின் அடக்குமுறை பள்ளியின் சட்ட திட்டங்கள் எதுவுமே இனி இவரைக் கட்டுப்படுத்த முடியாதல்லவா? சுதந்திரப் பறவை யாக ஆக்கும் நாள் அந்த நாளல்லவா? அதனால் அந்தப் பொன்னாள் அவருக்கு எழிலுறு நாளாகத் தோன்றுகிறது. 'மேலுமெனைக் கட்டுப்படுத்துவ தொன்றில்லை' என்று தமது உள்ளத்துணர்வை அவரே அப் பாடலில் வெளிப்படுத்திவிடுகிறார். |