வெகு விரைவிலேயே எல்லா நகரத்தார் ஊர்களிலும் உள்ள அத்தனை இளைஞர்களும் 'கிராப்' வைக்கத் தொடங்கி விட்டார் களாம். துணிவுள்ளம் ஓர் அலமாரி முழுவதும் மருந்துகள், பஞ்சு, மாத்திரை உரைக்கும் கல், தைலங்கள், தேள் கடிக்கு மருந்து முதலானவை நிறைந்திருக்கும். அந்த அலமாரிக்கு மருந்து அலமாரி என்றே பெயர். அக்காலத்தில் ஏழை எளிய மக்கள் அவசரத் தேவைக்கு நள்ளிரவில் கூட இவர் களிடம் வருவார்கள். மருந்து சாப்பிட்டோ வாங்கிக் கொண்டோ செல்வார்கள். ஒரு சமயம் பாம்புப் பிடாரன் ஒருவன் வந்தான். வேரின் அடிப்பாகம் போன்ற சில துண்டுகளைக் காட்டி, 'பாம்பு கடித்தால் உடனே விஷத்தை இறக்கிவிடும் இந்த வேர்' என்று கூறி விலைக்கு வாங்கிக் கொள்ளச் சொன்னானாம். அதைச் சோதித்துப் பார்க்க எண்ணிய தந்தையார், பிடாரனிடம், 'உன் பாம்பைக் கொத்த விட்டு, உன் மருந்தினால் விடத்தை இறக்கி விடு பார்ப்போம்' என்று கையை நீட்ட பாம்பு கை விரலில் கொத்தியது. பிடாரன் வைத்திருந்த வேர் பயனளிக்கவில்லை. விடம் தலைக்கேறி, வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்து விட்டார். தற்செயலாக வந்த பாட்டியார், பிடாரனைக் கண்டதும் நிலைமையை ஊகித்து அறிந்து கொண்டார். அதற்குள் பிடாரனும் ஓடி விட்டான். தந்தையாரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றார்கள். அந்த நேரத்தில் வழக்கத்துக்கு மாறாக மருத்துவரும் அங்கிருந்தார். மாற்று ஊசி, மருந்து மூலமாக எமன் பிடியிலிருந்து தந்தையார் மீட்கப்பட்டார்கள். குறிப்பெழுதும் பழக்கம் வரகவி சுப்பிரமணிய பாரதியாருடன் தந்தையாருக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1918 அல்லது 1919 ஆம் ஆண்டு என்று கருதுகிறேன். அப்பொழுது தந்தையாரவர்களுக்கு வயது இருபத்து மூன்று இருக்கலாம். அவர்கள் காங்கிரசில் எந்த ஆண்டு சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை. 1914 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே நாள் குறிப்பு எழுதும் பழக்கம் அவர்களிடமிருந்தது. இறுதிக் காலத்தில் நோயில் படுக்கும் வரை தொடர்ந்து எழுதி வந்தார்கள். |