பக்கம் எண் :

12கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

உடனே இவருக்குச் சினந்தோன்றிவிடும் ‘நான் சொல்வதற்குத் தலையாட்டவா உங்களிடம் கேட்டேன்? நானென்ன முற்றும் உணர்ந்தவனா? நானும் தவறு செய்து விடலாமல்லவா? நீங்கள் அதையெதிர்த்துச் சொல்லும் துணிவு பெற வேண்டும். எடுத்ததற் கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போடாமல் எதிர்ச்சிந்தனை செய்ய வேண்டும். அதுதான் நல்லது’ என்று கடிந்து கொள் வார்.

மனைவியார் பிரிவு

இலக்குமி ஆச்சியவர்கள் அடிக்கடி நோய்வாய்ப் படுவதுண்டு. மேற்கூறிய வழக்கின் பொருட்டு நம் சண்முகனார் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவார். இவர் ஒரு முறை சிங்கப்பூருக்குச் சென்றிருந்த பொழுது, இலக்குமி ஆச்சி அவர்கள் நோய்வாய்ப் பட்டார். குடும்ப மருத்துவர் வந்து பார்த்து விட்டு, உடனிருந்த மகள் பார்வதியிடம் “அம்மாவின் உடல் நிலை மோசமாகி வருகிறது. இருபது அல்லது முப்பது நாளுக்கு மேல் ஓடாது. இந்த விவரத்தை அப்பாவுக்கு உடனே எழுதி விடுங்கள்” என்று கூறிச் சென்றார்.

அவ்வாறே மகள் பார்வதியும் தந்தையார்க்கு விவரமாக எழுதி விட்டார். சிங்கப்பூரிலிருந்து வீடு வந்து சேர அப்பொழுது பத்து நாளாவது ஆகும். கப்பற் பயணம் மட்டும் எட்டு நாளாகும். இந்நிலையில், தாம் வந்து சேருமுன் மனைவி காலமாகி விட்டால் வைதிக முறைப்படி எதுவும் செய்தல் கூடாதென்றும், எவ்வாறு இறுதிச்சடங்கு நடைபெற வேண்டு மென்றும், இலக்குமி ஆச்சியின் தங்கை கணவர்க்கும் திரு. இராம. சுப்பையா அவர்களுக்கும் திரு. சொ. முருகப்பனார்க்கும் மகன் சோலைக்கும் மகள் பார்வதிக்கும் ஒரே மாதிரி ஐந்து மடல் எழுதி, அவ்வாறே நடைபெற வேண்டு மென்று தெரிவித்து விட்டார் சண்முகனார்.

மனைவியார் உடல் அடக்கம் செய்யப்படுமுன் அவ்வுடல் மிகுதியான மலர்களால் அணி செய்யப்பட்ட ஊர்தியில் வைக்கப் பட்டு, இன்னஇன்ன வீதிகள் வழியாகக் கொணர்ந்து, அடக்கஞ் செய்யப்பட வேண்டும். பிற சடங்குகள் செய்தல் கூடாது - என அம் மடலிற் குறிப்பிட்டிருந்தார்.

உடனே முருகப்பனார், இராம. சுப்பையா, கோனாபட்டுப் பழ. பழநியப்பச் செட்டியார், மகன் சோலை, மகள் பார்வதி முதலி யோர்க்குத் தெரிவித்து விட்டார். இராம. சுப்பையா அவர்கள்,