பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்13

திருவரங்கம், உறையூர் முதலிய ஊர்களிலிருந்து தோழர்களை வரவழைத்தார். சில வீதிகளில் ஊர்வலமாக வருவதாலும் சடங்கு முறைகள் செய்யாமையாலும் குழப்பங்கள் நிகழினும் நிகழலா மென்று கருதியே தோழர்கள் வரவழைக்கப் பட்டனர். சண்முகனார் கட்டளை நிறைவேற்றப்பட்டது. சடங்கு முறைகள் நிகழாமையால் உறவினர்கள் உணவருந்தாது சென்றுவிட்டனர். சமைத்து வைத்த உணவெல்லாம் வீணாயிற்று.