பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்49

வயி.சு.ச.வைப் பற்றியும் பாரதியார் விரிவாகப் பாடியிருக் கிறார்.

பாரதியார் பாடல்கள் சிலவற்றைச் சின்னஞ்சிறு வெளியீடு களாக, முதல் முறையாகப் பாரதியார் காலத்திலேயே அச்சிட்டு வழங்கியவர், வயி.சு.ச. சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.

ஒருமுறை வயி.சு.ச. பெருந்தலைவர் காமராசரைச் சந்திக்கத் தலைமைச் செயலகத்திற்குச் சென்றார். அவர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட முதலமைச்சர் காமராசர், தாமே எழுந்து போய் 'பாரதியாரை அவர் காலத்திலேயே ஆதரித்த வள்ளலே வருக' என்று மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றார்."

- 'நகரத்தார் குரல்' நவம்பர் 1986

பாவேந்தர் தொடர்பு

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குடும்பத்துக்கும் சண்முகனார் குடும்பத்துக்கும் உறவு முறைப்பழக்கம் இருந்தது என்பது முன்னரே குறிப்பிடப்பட்டது.

மஞ்சுளாபாய் அம்மையார், புரட்சிக்கவிஞரை 'அண்ணன்' என்றுதான் அழைப்பார். சண்முகனார்க்கு மைத்துனர் முறையா கிறார். அந்த அளவிற்கு அவர்களுக்குள் நெருக்கமான இறுக்கமான தொடர்பிருந்தது.

புரட்சிக் கவிஞருக்குப் பல வகையாலும் உதவி செய்து ஆதரித்து வந்தார். குடும்ப நிகழ்ச்சிகளில் நேரடிப் பங்கு கொண்டு, தாமே முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார்.

'முத்தமிழ் நிலையம்' தோன்றுவதற்கும், புரட்சிக் கவிஞரின் நூல் சில வெளியாகவும், இயல், இசை, நாடகம் மூன்றும் ஒருங்கே அமைந்த பாரதிதாசன் 'இன்ப இரவு' அரங்கேறவும், கவிஞரின் மூத்த மகள் சரசுவதியின் திருமணம் நிகழவும் முயற்சிகள் மேற் கொண்டு, பல்வகை உதவிகள் புரிந்திருக் கிறார்.

இவருவரும் உரிமையுடன் ஒன்றிப் பழகுவர். அதே சமயம் சண்டையும் போட்டுக் கொள்ளுவர். கடுமையாகச் சொற்கள் வெளி வருவதும் உண்டு. குழந்தைகள் அன்போடு இணைந்து விளையாடும் பொழுது திடீரென்று 'டூ' விட்டுவிடுவதுண்டு.