பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு369

“கள்ளனைக் கட்டிச் செல்லுங் காலையில் கள்ளன் ஈமத்
தெள்ளிய நீற்றின் வீழ்ந்து சிரித்தரகர என்றெய்த (மிக்க
உள்ளம் வாழ்ந்தெதிர்கொள் வேந்தன்விடும்விடும் உயர்பால்
வெள்ளரைக் கள்ளர் என்றோ விளம்புவதெனப் பணிந்தான்.”

“தேடருஞ் சிறப்பின் மிக்க திருவிடை மருதினெல்லைக்
காடிடை நரிகள் விட்ட கடுங்குரல் ஓசை கேட்டுப்
பீடுடை இறைவன் தன்னைப் பேசரும் விருப்பத்தோடும்
பாடிய வென்று தென்னன் பல்பெரும் படாம் கொடுத்தான்.”

“நேசமார் தேவிதன்னை நின்னுடை யடிமைக்கா மென்று
ஆசைகூர்ந் தளித்தவ் வேந்தன், வாவியில் தவளை பல்கால்
தேசுற ஒலிப்பக் கேட்டுச் சிவனையே பாடிற்றென்று
காசொடு பொன்னும் மின்னக் கலந்து தூவினன் கசிந்து.35

வரகுண பாண்டியனுடைய இந்தச் சிவபக்தியைப் பட்டினத்துப்பிள்ளையார் மிக அழகாகக் கூறுகிறார்:

“வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளன் கையில் கட்விழ்ப் பித்தும்,
ஓடும் பன்னரி ஊளைகேட்ட டரனைப்
பாடின வென்று படாம்பல அளித்தும்,
குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னும் கலந்து தூவியும்,
வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய
செழுவிதை எள்ளை தின்னக் கண்டு
பிடித்தலும் அவன் இப்பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்,
மருத வட்டத் தொருதனிக் கிடந்
தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல எம்மித் தலையும்
கிடத்தல் வேண்டுமென்று அடுத்தடுத் திரந்தும்,
கோயின் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்தன என்று நாய்க்கட்டம் எடுத்தும்,
காம்புகுத்து உதிர்ந்த கனியுருக் கண்டு